படம் 1% ஏமாற்றினாலும் என் வீடுதேடி வரலாம்: 'தி ராஜா சாப்' இயக்குனர் மாருதி பேச்சு | பிரியங்கா மோகனின் கன்னட படம் '666 ஆப்ரேஷன் ட்ரீம் தியேட்டர்' பர்ஸ்ட்லுக் வெளியீடு | பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை |

இந்தியாவிலேயே அதிகமான திரைப்பட பாடல்களை எழுதியவர் என்ற பெருமையும், ஐந்து தலைமுறை கதாநாயகர்களுக்கு பாடல்கள் எழுதியவர் என்ற பெருமையும் உடையவர் மறைந்த கவிஞர் வாலி. 15 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களை எழுதியிருக்கிறார். அரசியல் உணர்வுகளுக்கு அப்பாற்பட்டு கருணாநிதி, எம்ஜிஆர் என்ற இரு பெரும் தலைவர்களாலும் நேசிக்கப்பட்டவர். இவர் கடந்த 2013ம் ஆண்டு, தனது 81வது வயதில் காலமானார்.
இந்நிலையில், வாலி பதிப்பகம் சார்பில் அவரின் 94 வது பிறந்தநாள் விழா, நவம்பர் 1ம் தேதி சனிக்கிழமை சென்னையில் கொண்டாடப்படுகிறது. அதில் ஆண்டுதோறும் 50 ஆயிரம் பொற்கிழியுடன் வழங்கப்படும் வாலி விருது இசையமைப்பாளர், இயக்குனர் கங்கை அமரனுக்கு வழங்கப்பட உள்ளது. இந்த விருதுகளை வழங்கி வாலி குறித்து பேச உள்ளார் இயக்குனர் கே. பாக்யராஜ்.
இந்த விழாவில் திரைப்பட உதவி இயக்குனர் கவிஞர் பதுமை செல்வன் எழுதிய வாலியின் திரைப்பாட்டு முழக்கங்கள் எனும் நூலை திரைப்பட இயக்குனர் லிங்குசாமி வெளியிடுகிறார். மேலும் விழாவில் வாலி பாடல்கள் அடங்கிய திரைப்பட இசை நிகழ்ச்சியும் நடக்க உள்ளது.