கலைமாமணி விருது பெற்றனர் சாய் பல்லவி, அனிருத், விக்ரம் பிரபு | மீண்டும் தனுஷ் படத்திற்கு இசையமைக்கும் அனிருத் | டியூட் சமூகப் பிரச்னையை வெளிச்சம் போட்டு காட்டும் : சொல்கிறார் பிரதீப் ரங்கநாதன் | கமலுக்கு அடுத்து அழகான ஹீரோ ஹரிஷ் கல்யாண் தான் : சொல்கிறார் இயக்குனர் மிஷ்கின் | ரஜினியின் வேட்டையன் வெளியாகி ஓராண்டு நிறைவு : இயக்குனர் ஞானவேல் வெளியிட்ட பதிவு | கணவரின் ஆயுள் நீடிக்க காஜல் அகர்வால் கர்வா சவுத் பூஜை | பிளாஷ்பேக்: ரஜினி படத்தில் நடிக்க மறுத்த சிவாஜி | பிளாஷ்பேக் : 36 ஆண்டுகள் இருட்டு அறையில் தனிமையில் வாழ்ந்த நடிகை | முதல் படத்திலேயே ஆக்ஷன் ஹீரோயின் ஆன சுஷ்மிதா சுரேஷ் | 'பேட்டில்' படத்தில் ராப் பாடகரின் வாழ்க்கை |
துரோகி, இறுதிச்சுற்று படங்களை இயக்கிய சுதா கொங்கரா, சூர்யா நடிப்பில் சூரரைப்போற்று என்ற படத்தை இயக்கினார். பல தேசிய விருதுகளை பெற்ற அந்த படத்தை தற்போது ஹிந்தியில் அக்ஷய் குமாரை வைத்து ரீமேக் செய்துள்ளார். இந்நிலையில் அடுத்தபடியாக சூர்யா நடிப்பில் புறநானூறு என்ற படத்தை இயக்க திட்டமிட்டிருந்தார் சுதா.
ஆனால் திடீரென்று கார்த்திக் சுப்பராஜ் சொன்ன கதை பெரிய அளவில் இம்ப்ரஸ் பண்ணியதால் அவர் இயக்கும் படத்தில் நடிப்பதற்கு கமிட்டாகி விட்டார் சூர்யா. இதனால் சூர்யா நடிப்பில் சுதா இயக்கயிருந்த புறநானூறு படம் டிராப் ஆகிவிட்டதாக கூறப்படுகிறது. அதன் காரணமாக அடுத்து அவர் சிவகார்த்திகேயனை சந்தித்து ஒரு கதை சொல்லி இருக்கிறார். இது சூர்யாவுக்காக அவர் தயார் செய்திருந்த புறநானூறு படத்தின் கதை என்றும் கூறப்படுகிறது.