வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று | பிரதீப் ரங்கநாதன் பாணியில் அபிஷன் ஜீவிந்த் நாளை மறுநாள் ஹீரோ ஆகிறார் | பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா | ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி | 3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி |
இயக்குனர் ஷங்கர், நடிகர் கமல் கூட்டணியில் உருவான இந்தியன் 2 படம் தற்போது இந்தியன் 3-ஆகவும் விரிவடைந்துள்ளது. காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், சித்தார்த், பாபி சிம்ஹா உள்ளிட்ட ஏகப்பட்ட திரைநட்சத்திரங்கள் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் நடக்கின்றன. ஜூலை 12ல் படம் ரிலீஸாக உள்ளது.
இந்நிலையில் மே 22ம் தேதியான இன்று ‛இந்தியன் 2' படத்திலிருந்து ‛பாரா...' என்ற முதல் பாடலை வெளியிட்டுள்ளனர். பா.விஜய் எழுதி உள்ள இந்த பாடலை அனிருத், ஸ்ருத்திகா ஆகியோர் இணைந்து பாடி உள்ளனர். தாய் மண்ணிற்காக போராடும் வீரனை பற்றிய தேச பக்தி பாடலாக வெளியாகி உள்ளது. அனிருத்தின் பின்னணி இசை, குரல் ஆகியவை அருமையாக இருப்பதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
குறிப்பாக ‛‛என் தாய் மண் மேல் ஆனை... இது தமிழ் மானத்தின் சேனை... அட வெள்ளை இரத்தம் தொட்டு... இனி வாளில் என்று சானை...'' என்ற வரிகள் ரசிகர்களை வெகுவாய் கவர்ந்துள்ளது. இதை ரசிகர்கள் பலரும் வைரலாக்கி வருகின்றனர்.
தமிழ் மட்டுமின்றி ‛பாரா' பாடல், தெலுங்கில் ‛சவுரா'வாகவும், ஹிந்தியில் ‛ஜாகோ...' என்ற பெயரிலும் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்தியன் 2 படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூன் 1ல் நடப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.