ஆர்யாவின் ‛அனந்தன் காடு' | விஜய்யை தொடர்ந்து தனுஷை இயக்கும் வினோத் | ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை காண முடியாமல் போனவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு | துருவ நட்சத்திரம் : சிம்ரன் அளித்த உறுதி | குபேரா படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு | பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் |
மகிழ்திருமேனி இயக்கும் விடாமுயற்சி மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் குட் பேட் அக்லி ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறார் அஜித் குமார். இதில் குட் பேட் அக்லி படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த படத்தில் முழு வீச்சில் நடிப்பதற்கு திட்டமிட்டுள்ளார் அஜித். ஜூன் மாதம் இறுதியில் இருந்து விடாமுயற்சி படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்ளவும் திட்டப்பட்டுள்ளார்.
அந்த வகையில், இந்த ஆண்டில் இரண்டு படங்களிலும் நடித்து முடித்து விடும் அஜித், அடுத்தபடியாக சிவா இயக்கத்தில் மீண்டும் நடிக்கவுள்ளார். தற்போது சூர்யா நடிப்பில் கங்குவா படத்தை இயக்கியிருக்கும் அவர் ஏற்கனவே அஜித் இடத்தில் கதை சொல்லி ஓகே பண்ணி வைத்திருக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் மோகன் ராஜாவும் அஜித்தை சந்தித்து ஒரு கதை சொல்லி இருக்கிறார். அந்த கதையும் அஜித்துக்கு பிடித்து விட்டதால், கைவசம் உள்ள இரண்டு படங்களையும் முடித்துவிட்டு அடுத்தபடியாக சிவா, மோகன் ராஜா ஆகிய இருவரின் படங்களிலும் நடிப்பதற்கு அவர் திட்டமிட்டுள்ளார்.