வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று | பிரதீப் ரங்கநாதன் பாணியில் அபிஷன் ஜீவிந்த் நாளை மறுநாள் ஹீரோ ஆகிறார் | பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா | ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி | 3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி |
சுந்தர்.சி இயக்கத்தில் வெளிவந்த அரண்மனை 1, 2, 3 ஆகிய பாகங்களின் வெற்றியைத் தொடர்ந்து சமீபத்தில் வெளிவந்த அரண்மனை படத்தின் 4ம் பாகத்தை சுந்தர். சி இயக்கி, நடித்திருந்தார். இதில் தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு, வி.டி.வி.கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ளார்.
இந்தாண்டில் இதுவரை 90 படங்கள் வரை வெளியாகி உள்ளது. அவற்றில் இந்தபடம் தான் வசூல் ரீதியாக நல்ல லாபத்தை தந்தது. இப்படம் வெளியாகி மூன்று வாரங்களைக் கடந்த நிலையில் இப்போது உலகளவில் ரூ. 100 கோடி வசூலை எட்டியதாக அதிகாரப்பூர்வமாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதன் மூலம் சுந்தர்.சிக்கு முதல் ரூ.100 கோடி வசூலித்த படமாக அரண்மனை 4 அமைந்துள்ளது. மேலும், தமிழகத்தில் மட்டும் அரண்மனை 4ம் பாகம் ரூ.60 கோடி வசூலைக் கடந்ததாக சினிமா வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.