மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
ஆஸ்கர் நாயகன் என அழைக்கப்படும் இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் எண்ணற்ற விருதுகளை வென்றவர். சர்வதேச விருதுகள், இந்திய விருதுகள் என பல விருதுகள் அவருக்குக் கிடைத்துள்ளன.
சமீபத்திய பேட்டி ஒன்றில் அப்படிப்பட்ட விருதுகளைப் பற்றிய கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கையில், “விருதுகளை அறையில் வைத்துள்ளேன். சில விருதுகள் என்னிடம் வரவேயில்லை. அந்த விருதுகளை அப்படங்களின் இயக்குனர்களே வைத்துக் கொண்டுள்ளார்கள். சர்வதேச விருதுகளை துபாயில் வைத்துள்ளேன். அவற்றை தங்கம் என நினைத்து எனது அம்மா டவலில் சுற்றி வைத்துள்ளார். மற்ற விருதுகள் சென்னையில் உள்ள அறையில் இருக்கின்றன” என்றார்.
ஏஆர் ரஹ்மானுக்காக அளிக்கப்பட்ட விருதுகளை சில இயக்குனர்கள் அவரிடம் திருப்பித் தராமல் இருப்பது ஆச்சரியமாக உள்ளது. அவர் அளித்த பேட்டியில் பேட்டியாளர் ரஹ்மான் வாங்கிய தேசிய விருதுகள், பிலிம்பேர் விருதுகள் பற்றி தவறான எண்ணிக்கையைச் சொன்னார். ஏஆர் ரஹ்மான் அவற்றைத் திருத்தி சரியான எண்ணிக்கை என்ன என்பதையும் கூறினார். தான் வாங்கிய விருதுகள் எத்தனையெத்தனை என்பதை மிகவும் ஞாபகமாக வைத்திருக்கிறார் ஏஆர் ரகுமான்.
இந்தப் பேட்டியைப் பார்த்த பிறகாவது ரஹ்மானின் விருதுகளை வைத்திருக்கும் அந்த இயக்குனர்கள் அவற்றைத் திருப்பித் தருவது நல்லது.