வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் | யு டியுப் சேனல்கள், சமூக வலைத்தளங்கள் இளையராஜா புகைப்படங்களை பயன்படுத்த இடைக்கால தடை | கஞ்சா வழக்கு : சிம்பு பட தயாரிப்பாளர் கைது | ராஜமவுலியின் கடவுள் மறுப்புப் பேச்சு : அதிகரிக்கும் சர்ச்சை | கதை என்னவென்று தெரியாமல் தான் எம்புரான் பட சென்சார் பிரச்னையில் உதவினேன் : சுரேஷ்கோபி | தி கேர்ள் ப்ரண்ட் ஹீரோவின் கன்னட பட ரிலீஸ் தேதி ஒரு வாரம் தள்ளி வைப்பு | தள்ளிப்போன மம்முட்டியின் களம்காவல் ரிலீஸ் | மகேஷ்பாபு, ரவீனா டாண்டன் குடும்ப வாரிசுகள் அறிமுகமாகும் படத்தில் இணைந்த ஜிவி பிரகாஷ் |

சுந்தர். சி இயக்கி நடித்து திரைக்கு வந்துள்ள படம் அரண்மனை 4. அவருடன் தமன்னா, ராஷி கண்ணா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்த படம் திரைக்கு வந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக இப்படம் திரைக்கு வந்து 10 நாட்களில் 55 கோடி வசூலித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. அதோடு இன்னும் கூட்டம் குறையாமல் தியேட்டர்களுக்கு ரசிகர்கள் படையெடுப்பதால் இந்த படத்தின் வசூல் இன்னும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த அரண்மனை-4 படத்தின் வெற்றியை தொடர்ந்து ஏற்கனவே தான் இரண்டு பாகங்கள் இயக்கி வெளியிட்டுள்ள கலகலப்பு படத்தின் மூன்றாம் பாகத்தை இயக்கும் பணிகளில் இறங்கி இருக்கிறார் சுந்தர். சி. அது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.




