லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
சுந்தர். சி இயக்கி நடித்து திரைக்கு வந்துள்ள படம் அரண்மனை 4. அவருடன் தமன்னா, ராஷி கண்ணா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்த படம் திரைக்கு வந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக இப்படம் திரைக்கு வந்து 10 நாட்களில் 55 கோடி வசூலித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. அதோடு இன்னும் கூட்டம் குறையாமல் தியேட்டர்களுக்கு ரசிகர்கள் படையெடுப்பதால் இந்த படத்தின் வசூல் இன்னும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த அரண்மனை-4 படத்தின் வெற்றியை தொடர்ந்து ஏற்கனவே தான் இரண்டு பாகங்கள் இயக்கி வெளியிட்டுள்ள கலகலப்பு படத்தின் மூன்றாம் பாகத்தை இயக்கும் பணிகளில் இறங்கி இருக்கிறார் சுந்தர். சி. அது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.