சினிமாவில் இது தான் எதார்த்தம் : திரிப்தி டிமிரி | சோசியல் மீடியாவில் விமர்சிக்கப்படும் சாய்பல்லவியின் சீதா தேவி கதாபாத்திரம்! | விஜய் இல்லாமல் எல்சியுவை தொடர சான்ஸ் இல்லை! - லோகேஷ் கனகராஜ் | பிரசாந்த் நீல், ஜூனியர் என்டிஆர் படத்தில் இணைந்த டொவினோ தாமஸ் | பாலிவுட் நடிகர் அமீர்கான் வீட்டுக்கு போன 25 ஐபிஎஸ் அதிகாரிகள்! | வில்லன் நடிகரின் வீண் பிடிவாதத்தால் மோகன்லால் ராஜினாமா செய்தார் : மாலா பார்வதி | பாண்டிராஜ் இயக்கத்தில் அடுத்து நடிப்பது விஜய்சேதுபதியா? சூரியா? | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளரின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு | ஹிந்தியில் நேரடியாக டிவியில் ஒளிபரப்பாகும் ‛ரங்கஸ்தலம்' | மோகன்லாலை போலத்தான் கஜோலும் : பிரமிக்கும் பிரித்விராஜ் |
வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான மாநாடு திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதை தொடர்ந்து அவர் இயக்கத்தில் மன்மத லீலை மற்றும் தமிழ், தெலுங்கில் உருவான கஸ்டடி என இரண்டு படங்கள் ரிலீஸ் ஆகிவிட்டன. ஆனால் இந்த மூன்று படங்களுக்கு முன்பே துவங்கப்பட்ட படம் தான் பார்ட்டி. வெங்கட் பிரபுவின் ஆஸ்தான நட்சத்திர பட்டாளம் இடம் பெற்றுள்ள இந்த படத்தை அம்மா கிரியேஷன்ஸ் டி சிவா தயாரித்துள்ளார். தனது படங்களை சிரமப்பட்டாவது ரிலீஸ் செய்து விடும் தயாரிப்பாளர் டி.சிவா பார்ட்டி படத்தின் ரிலீஸ் இவ்வளவு தாமதமாவது ஏன் என்பது குறித்த தகவலை தற்போது வெளிப்படுத்தி உள்ளார்.
இது பற்றி ஒரு பேட்டியில் அவர் கூறும்போது, இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு பிஜி தீவில் தான் படமாக்கப்பட்டன. அதற்கு காரணம் படத்தின் கதை ஒரு பக்கம் என்றாலும் இன்னொரு பக்கம் பிஜி தீவில் படப்பிடிப்பை நடத்தினால் அங்கே செலுத்தும் கட்டணத்தில் 47 சதவீதம் நமக்கு திருப்பி தரப்படும் என ஒரு சலுகை அப்போது இருந்தது. ஆனால் கொரோனா தாக்கம் காரணமாக சூழ்நிலை மாறி சுற்றுலா பாதிக்கப்பட்டு இது போன்று சலுகைத்தொகை வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டு விட்டது. இது போன்ற பல படங்கள் இந்த சலுகைக்காக நிலுவையில் இருக்கின்றன.
தற்போது அங்கு அரசாங்கம் மாறியுள்ள நிலையில் இது போன்ற சலுகை தொகையை வழங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. படத்தை ரிலீஸ் செய்து விட்டால் இந்த தொகையை பெற முடியாமல் போய்விடும். அந்த அளவிற்கு இது மிகப்பெரிய தொகையும் கூட. அதனால் அந்த தொகையை பெற்ற பின்னர் இந்த படத்தை ரிலீஸ் செய்வதற்கு திட்டமிட்டுள்ளோம். அக்டோபர் மாதத்திற்குள் இந்த படம் ரிலீசுக்கு தயாராகி விடும் என்று கூறியுள்ளார்.