நடிகை ராதிகாவுக்கு டெங்கு : மருத்துவமனையில் அனுமதி | மோசடி வழக்கு : காமெடி நடிகர் சீனிவாசன் கைது | பிரபாஸ் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த பூரி ஜெகன்நாத், சார்மி கவுர் | சோசியல் மீடியாவில் 7 ஆண்டுகளாக அவதூறு பரப்பிய பெண்ணை அடையாளப்படுத்திய பிரித்விராஜ் மனைவி | அசினுடன் நடந்த டெஸ்ட் ஷூட் : பஹத் பாசிலுக்கு கைமாறிய பிரித்விராஜ் படம் | நடிகர் சங்கத்திற்கு பெண் தலைமை : மோகன்லால் ஆலோசனைப்படி வேட்பு மனுவை வாபஸ் பெற்ற நடிகர் | ஜான்வி கபூரின் ‛பரம் சுந்தரி' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தனுஷ் நடிக்கும் 54வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது | கதை சர்ச்சையில் சிக்கிய ஸ்ரீலீலாவின் ஆஷிகி 3 | மாதம்பட்டி ரங்கராஜ் உடனான திருமணம் : கணவன், மனைவியாக பயணத்தை துவங்கியதாக ஜாய் கிரிஸ்டலா பதிவு |
இசையமைப்பாளர் மற்றும் நடிகர் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைப்பாளராக 100வது படத்தை எட்டியுள்ளார். அதேபோல், நடிகர் ஆக 25வது படத்தில் விரைவில் நடிக்கவுள்ளார். இப்படத்தை ஜி.வி. பிரகாஷ் சொந்தமாக தயாரிக்கிறார்.
இதற்கு முன்பு கடந்த 2013ம் ஆண்டில் வெளிவந்த ' மதயானைக்கூட்டம்' படத்தை ஜி.வி. பிரகாஷ் தயாரித்திருந்தார் அதன் பிறகு இத்தனை வருடங்கள் கழித்து ஜி.வி. பிரகாஷ் பட தயாரிப்பில் ஈடுபடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜி.வி. பிரகாஷ் உடன் இணைந்து இந்த படத்தை ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர்.
ஜி.வி. பிரகாஷின் 25வது படத்தை புதுமுக இயக்குனர் ஒருவர் இயக்கவுள்ளார். இதனை மூன்று பாகங்களாக உருவாக்க தற்போதே முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு வருகின்ற செப்டம்பர் மாதத்தில் இருந்து துவங்குகிறது. விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.