சீரியலிலும் அட்ஜெஸ்ட்மென்ட் இருக்கு - நிமிஷிகா பளீச் பேட்டி | சிம்பு நடிக்க இருந்த படத்தில் ரஜினியா? | மகனுக்கு அன்பு முத்தம் கொடுக்கும் நயன்தாரா! லைக்ஸ்களை அள்ளும் புகைப்படம்!! | பாடகி சுசித்ரா மீது கொச்சின் போலீசில் புகார்! | இன்ஸ்டா கணக்கை மீட்டெடுத்த ஜெயம் ரவி | திருவருள், மன்மதன், கொம்பன் - ஞாயிறு திரைப்படங்கள் | மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை |
இசையமைப்பாளர் மற்றும் நடிகர் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைப்பாளராக 100வது படத்தை எட்டியுள்ளார். அதேபோல், நடிகர் ஆக 25வது படத்தில் விரைவில் நடிக்கவுள்ளார். இப்படத்தை ஜி.வி. பிரகாஷ் சொந்தமாக தயாரிக்கிறார்.
இதற்கு முன்பு கடந்த 2013ம் ஆண்டில் வெளிவந்த ' மதயானைக்கூட்டம்' படத்தை ஜி.வி. பிரகாஷ் தயாரித்திருந்தார் அதன் பிறகு இத்தனை வருடங்கள் கழித்து ஜி.வி. பிரகாஷ் பட தயாரிப்பில் ஈடுபடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜி.வி. பிரகாஷ் உடன் இணைந்து இந்த படத்தை ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர்.
ஜி.வி. பிரகாஷின் 25வது படத்தை புதுமுக இயக்குனர் ஒருவர் இயக்கவுள்ளார். இதனை மூன்று பாகங்களாக உருவாக்க தற்போதே முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு வருகின்ற செப்டம்பர் மாதத்தில் இருந்து துவங்குகிறது. விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.