புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
சிலர் பொது மேடையில் பேசும்போது வாய் தவறி இன்னொருவரின் பெயரையோ பட்டங்களையோ மாற்றி கூறிவிடுவார்கள். ஆனால் மிக பொறுமையாக வார்த்தைகளை தேர்ந்தெடுத்து பதிவிடும் சோசியல் மீடியாவில் கூட இதுபோன்ற குழப்பம் நடக்கும் என நிரூபித்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார் நடிகை ஊர்வசி ரவுட்டேலா.
கடந்த வருடம் சரவணா ஸ்டோர் அருள் சரவணன் நடித்த லெஜன்ட் படத்தில் கதாநாயகியாக நடித்தவர் தான் இவர். தற்போது தெலுங்கில் சமுத்திரக்கனி இயக்கத்தில் பவன் கல்யாண் மற்றும் சாய் தரம் தேஜ் நடிப்பில் வெளியாகியுள்ள ப்ரோ என்கிற படத்திலும் இவர் கதாநாயகியாக நடித்துள்ளார்.
இந்த நிலையில் நடிகர் பவன் கல்யாணுடன் இந்த படத்தில் நடித்த தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ‛‛நடிகர் பவன் கல்யாணை முதலமைச்சர் என்று குறிப்பிட்டு அதிர்ச்சி அளித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "நமது ஆந்திர முதலமைச்சர் பவன் கல்யாணுடன் ப்ரோ படத்திற்காக திரையை பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று குறிப்பிட்டு இருந்தார்.
இவரது பதிவு வெளியான நிமிடத்தில் இருந்து அதை பார்த்து அதிர்ச்சியான நெட்டிசன்கள் ஊர்வசி ரவுட்டேலாவை விமர்சித்தும், கிண்டலடித்தும் கருத்துக்களை வெளியிட துவங்கினர். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கழித்து ஊர்வசியின் கவனத்திற்கு இது தெரிய வந்ததும் உடனே தனது பதிவில் குறிப்பிட்டிருந்த முதலமைச்சர் என்கிற வார்த்தையை நீக்கிவிட்டு பவன் கல்யாண் காரு என்று மாற்றிவிட்டார் ஊர்வசி ரவுட்டேலா.