மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
நடிகர் ஜெயம் ரவி நடித்த பொன்னியின் செல்வன் 2 படம் வரும் ஏப்ரல் 28 அன்று திரைக்கு வருகிறது. இப்போது சைரன், இறைவன் போன்ற படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இதை தொடர்ந்து புதுமுக இயக்குனர் இயக்கத்தில் ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படத்தில் ஜெயம் ரவி நடிக்கவுள்ளார்.
இந்நிலையில் அவரது அடுத்த படத்தின் தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, குட்டி புலி, கொம்பன், மருது, விருமன் உள்ளிட்ட படங்களை இயக்கிய முத்தையா இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கவுள்ளார் என கூறப்படுகிறது. இந்த படத்தை ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரிக்கின்றனர் என தகவல் வெளியாகியுள்ளது. இது முழுக்க கிராமத்து கதையில் தயாராக உள்ளது. முதன்முறையாக ஜெயம் ரவி படம் முழுக்க வரும் கிராமத்து வேடத்தில் நடிக்க போகிறார்.