அரசியல் பேசி சினிமா நண்பர்களை இழக்க விரும்பவில்லை : ‛உயிருள்ள வரை உஷா' ரீ-ரிலீஸ் நிகழ்வில் டி ராஜேந்தர் பேட்டி | 'மதராஸி' படத்தை வாங்கிய வேல்ஸ் நிறுவனம் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | சினிமாவில் பொறுமை அவசியம் ; நல்ல படங்களுக்காக காத்திருக்கிறேன்... : புதுமுகம் ஜீவிதா! | தம்பதிகளின் உறவுச் சிக்கலை பேசும் ‛மதர்' | சிங்கப்பூரில் மறு தணிக்கை செய்யப்பட்ட 'கூலி' | பிளாஷ்பேக் : நண்பருக்காக சம்பளம் வாங்காமல் நடித்த மோகன் | பிளாஷ்பேக் : அக்கா குடும்பத்திற்காக சினிமாவை துறந்த தங்கை | ஏஆர் முருகதாஸ் ஒரு 'சந்தர்ப்பவாதி' : சல்மான்கான் ரசிகர்கள் விமர்சனம் | ரஜினி, கமல் இணையும் படம் : லோகஷே் கனகராஜ் மாற்றமா? |
மணிரத்னம் இயக்கத்தில், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா மற்றும் பலர் நடிப்பில் நேற்று வெளியான படம் 'பொன்னியின் செல்வன்'. இப்படம் பான் இந்தியா படமாக தமிழ் மட்டுமல்லாது ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் வெளியாகி உள்ளது.
ஹிந்தியில் 'விக்ரம் வேதா' படமும், கன்னடத்தில் 'கண்டாரா' படமும் இப்படத்திற்குப் போட்டியாக உள்ளன. அதே சமயம் 'விக்ரம் வேதா' படத்திற்கு 'பொன்னியின் செல்வன்' படத்தின் கதாநாயகர்களான கார்த்தி, ஜெயம் ரவி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
கார்த்தி நேற்றும், ஜெயம் ரவி இன்றும் வாழ்த்து தெரிவித்துள்ளார்கள். அவர்களுக்கு 'விக்ரம் வேதா' படத்தின் இயக்குனர்களாக புஷ்கர், காயத்ரி நன்றி தெரிவித்து, “பொன்னியின் செல்வன்' படத்தைப் பார்க்க ஆவலுடன் காத்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
தமிழ் சினிமா உலகத்தைச் சேர்ந்த புஷ்கர் காயத்ரி தமிழில் இயக்கிய 'விக்ரம் வேதா' படத்தை அதே பெயரில் தெலுங்கிலும் இயக்கியுள்ளார்கள். இப்படத்திற்கு விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்தாலும் இன்னும் வசூல் ரீதியாக பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை என பாலிவுட் தகவல்கள் தெரிவிக்கின்றன.