தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீன கலைக்கல்லூரி பிரமாண்ட அரங்கத்தில் தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞான சம்பந்த பரமாசாரிய சுவாமிகளின் 60வது மணிவிழா மாநாடு நடைபெற்றது. 10 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் முதல் நாளில் இசையமைப்பாளர் இளையராஜா மகனும், இசையமைப்பாளருமான கார்த்திக் ராஜாவின் இன்னிசை கச்சேரி நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களிடம் கார்த்திக் ராஜா கூறியதாவது: தருமபுரம் ஆதீனத்தின் முன்னிலையில் இசையமைப்பது எனக்கு ஒரு மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்துள்ளது. மிகப்பெரிய மரியாதை கிடைத்துள்ளது சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை. எனது இசை நிகழ்ச்சியை முழுமையாக ரசித்து நன்றாக உள்ளது என அவர் சொன்னதை ஆசிர்வாதமாக கருதுகிறேன்.
‛தருமபுரம் ஆதீனத்தின் இசை புலவர்' என்ற விருது வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்கள். இதற்கு முன்பு இந்த விருதை பாடகர் கே.ஜே யேசுதாஸ்சுக்கு வழங்கப்பட்டது. அவருக்கு பின்னர் நான் வாங்கும் போது ரொம்ப சின்னவனாக தெரிகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.