7ஜி ரெயின்போ காலனி 2 அப்டேட் சொன்ன செல்வராகவன் | ராஷ்மிகாவின் 'தி கேர்ள் பிரண்ட்' படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம் வெளியானது! | விருது மாற்றி கிடைத்ததில் கொஞ்சம் வருத்தம் தான் : மஞ்சும்மல் பாய்ஸ் இசையமைப்பாளர் | நிகழ்ச்சிக்கு தாமதமாக வந்த மாதுரி தீக்ஷித் : கோபத்தில் வெளியேறிய ரசிகர்கள் | கேரள அரசு குழந்தை நட்சத்திர விருதுகள் மிஸ்ஸிங் : கிளம்பியது சர்ச்சை | ஆர்யன் பட கிளைமாக்ஸ் மாற்றம் : ஹீரோ விஷ்ணு விஷால் அறிவிப்பு | சாய் அபயங்கரை வாழ்த்திய அல்லு அர்ஜுன்! | வேகம் எடுக்கும் விஜய்யின் 'ஜனநாயகன்' படக்குழு! இம்மாதம் முதல் பாடல் வெளியாகிறது! | அஜித் 64வது படத்தில் நடிக்க விஜய்சேதுபதி, லாரன்ஸிடம் பேச்சுவார்த்தை! | டிரெயின் பட ரிலீசில் அதிரடி முடிவு எடுத்த தாணு |

இளையராஜாவின் மூத்த மகன் கார்த்திக் ராஜா 'கிங் ஆப் கிங்ஸ்' என்ற பெயரில் முக்கிய நகரங்களில் இசை நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டிருக்கிறார். இதன் முதல் நிகழ்ச்சி மலேசியாவில் நடப்பதாக இருந்தது. தற்போது அந்த திட்டம் கைவிடப்பட்டு கோவையில் வருகிற ஆகஸ்ட் மாதம் 17ம் தேதி நடக்கிறது. நிகழ்ச்சி முன் ஏற்பாடுகளுக்காக கோவை சென்ற கார்த்திக்ராஜா அங்கு நிருபர்களிடம் கூறியதாவது: கோவையில் இது என்னுடைய முதல் நிகழ்ச்சி. இதனை முதலில் மலேசியாவில் நடத்த திட்டமிட்டிருந்தேன். அங்கு ஏற்பட்ட சில குழப்பங்களால் கோவையில் நடத்துகிறேன்.
இந்த நிகழ்ச்சியில் எல்லா இசை அமைப்பாளர்களின் பாடல்களும் இடம் பெறும், அப்பா இளையராஜாவின் பாடல்களுகளும் இடம் பெறும். 4 மணி நேரம் நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டிருக்கிறோம்.
காப்புரிமை குறித்து ஆய்வு மேற்கொண்டு பாடல்களை தேர்ந்தெடுத்துள்ளேன், அதையே மேடையில் பயன்படுத்த இருக்கிறேன். அப்பா இளையராஜாவின் பாடல்களையும் எழுத்துப்பூர்வமாக அனுமதி பெற்று தான் பயன்படுத்த இருக்கிறேன். தற்போது இரண்டு படங்களுக்கு இசை அமைத்து வருகிறேன். எனது பட பாடல்களையும் பாட உள்ளேன் என்றார்.