'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை | 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் | மலேசியாவில் மிரட்டிய 'ஜனநாயகன்' : 'பராசக்தி' படத்துக்கு பிரஷர் | சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை | அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' | பாடல்களாய் உலகம் சுற்றுவேன் | 'கொம்புசீவி' தயாராகும் இன்னொரு தனுஷ் | உரிமைக்குரல், வானத்தைப்போல, மெய்யழகன் - ஞாயிறு திரைப்படங்கள் |

இளையராஜாவின் மூத்த மகன் கார்த்திக் ராஜா 'கிங் ஆப் கிங்ஸ்' என்ற பெயரில் முக்கிய நகரங்களில் இசை நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டிருக்கிறார். இதன் முதல் நிகழ்ச்சி மலேசியாவில் நடப்பதாக இருந்தது. தற்போது அந்த திட்டம் கைவிடப்பட்டு கோவையில் வருகிற ஆகஸ்ட் மாதம் 17ம் தேதி நடக்கிறது. நிகழ்ச்சி முன் ஏற்பாடுகளுக்காக கோவை சென்ற கார்த்திக்ராஜா அங்கு நிருபர்களிடம் கூறியதாவது: கோவையில் இது என்னுடைய முதல் நிகழ்ச்சி. இதனை முதலில் மலேசியாவில் நடத்த திட்டமிட்டிருந்தேன். அங்கு ஏற்பட்ட சில குழப்பங்களால் கோவையில் நடத்துகிறேன்.
இந்த நிகழ்ச்சியில் எல்லா இசை அமைப்பாளர்களின் பாடல்களும் இடம் பெறும், அப்பா இளையராஜாவின் பாடல்களுகளும் இடம் பெறும். 4 மணி நேரம் நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டிருக்கிறோம்.
காப்புரிமை குறித்து ஆய்வு மேற்கொண்டு பாடல்களை தேர்ந்தெடுத்துள்ளேன், அதையே மேடையில் பயன்படுத்த இருக்கிறேன். அப்பா இளையராஜாவின் பாடல்களையும் எழுத்துப்பூர்வமாக அனுமதி பெற்று தான் பயன்படுத்த இருக்கிறேன். தற்போது இரண்டு படங்களுக்கு இசை அமைத்து வருகிறேன். எனது பட பாடல்களையும் பாட உள்ளேன் என்றார்.