அடுத்த சிம்பொனி: இளையராஜா அறிவிப்பு | 'மகுடம்' படத்தின் இயக்குனர் ஆனார் விஷால்; அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் | அட்லி - அல்லு அர்ஜூன் படம் ஒரு சினிமா புரட்சி! ரன்வீர் சிங் வெளியிட்ட தகவல் | 2025ல் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகும் இறுதி படம் 'தி கேர்ள் ப்ரெண்ட்' | துல்கர் சல்மானின் காந்தா நவம்பர் 14ம் தேதி வெளியாகிறது! | நான் விருது வாங்கினாலும் குப்பை தொட்டியில் தான் போடுவேன்! : விஷால் | முதல் முறையாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் சம்யுக்தா! | பிளாஷ்பேக்: தெவிட்டாத திரையிசைப் பாடல்கள் தந்த தித்திக்கும் “தீபாவளி” நினைவுகள் | டேட்டிங் ஆப் மூலம் இரண்டாவது திருமணம் செய்த வசந்த பாலன் பட நாயகி | கதாநாயகன் ஆனார் 'சிறகடிக்க ஆசை' மனோஜ்! |
நடிகை ராஷ்மிகா மந்தனா மிகவும் பிஸியான பான் இந்திய நடிகையாக வலம் வருகிறார். தற்போது தெலுங்கில் 'தி கேர்ள் பிரண்ட்' என்கிற படத்தில் நடித்துள்ளார்.
நடிகர் மற்றும் பாடகி சின்மயி-ன் கணவருமான ராகுல் ரவீந்திரன் இந்த படத்தை இயக்குகிறார். இதில் ராஷ்மிகாவிற்கு ஜோடியாக தீக்ஷித் ஷெட்டி நடிக்கிறார். கீதா ஆர்ட்ஸ் மற்றும் தீராஜ் மோகிலினேனி என்டர்டெயின்மென்ட் என இரு தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர். இன்னும் இறுதிக்கட்ட பணிகளில் உள்ள இப்படத்தை இவ்வருட செப்டம்பர் 5ம் தேதியன்று திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர்.
க்ரிஷ் இயக்கத்தில் அனுஷ்கா நடித்துள்ள 'காட்டி' படத்தையும் செப்டம்பர் 5ம் தேதி வெளியிட முடிவு செய்துள்ளனர். இதன் மூலம் அனுஷ்கா, ராஷ்மிகா படங்கள் ஒரே தேதியில் நேருக்கு நேர் மோதுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.