லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று மைத்ரி மூவி மேக்கர்ஸ். அந்நிறுவனம் தற்போது 'புஷ்பா 2' படத்தைத் தயாரித்து வருகிறது.
இந்நிலையில் அந்நிறுவனத்திலும், 'புஷ்பா' பட இயக்குனர் சுகுமார் இல்லத்திலும் கடந்த வாரம் வருமான வரித் துறை மற்றும் அமலாக்கத் துறை ஆகியவை சோதனை நடத்தின. கடந்த ஐந்து நாட்களாக நடைபெற்று வந்த இந்த சோதனை நேற்றுடன் முடிவடைந்துள்ளது.
இதில் பெரிய அளவில் எதுவும் சிக்கவில்லை என்றும், சில சிறிய தவறுகள் நடைபெற்றுள்ளது மட்டும் கண்டுபிடிக்கப்பட்டு, அவற்றை விரைவில் சரி செய்ய சோதனையிட்ட துறையினர் கால அவகாசம் கொடுத்துள்ளதாகவும் டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சோதனையால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 'புஷ்பா 2' படப்பிடிப்பு மீண்டும் ஆரம்பமாகியுள்ளது என்றும் சொல்கிறார்கள்.