மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
மணிரத்னம் இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள 'பொன்னியின் செல்வன் 2' படம் இந்த வாரம் ஏப்ரல் 28ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்திற்கான 9 மணி சிறப்புக் காட்சிகள் உள்ளிட்ட காட்சிகளுக்கான முன்பதிவு தற்போது நடந்து வருகிறது.
இந்நிலையில் இரண்டாம் பாகத்தின் முதல் நாள் முதல் காட்சியைப் பார்ப்பேன் என படத்தில் சின்ன பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் நடித்துள்ள பார்த்திபன் தெரிவித்துள்ளார். முதல் பாகத்தை இதுவரை பார்க்கவில்லை என இரண்டாம் பாகத்தின் இசை வெளியீட்டின் போது அவர் பேசியது சலசலப்பை ஏற்படுத்தியது. படம் ஓடிடியில் வந்த பிறகும், டிவியில் ஒளிபரப்பான பிறகும் அப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவரே இப்படி சொல்வதா என பலர் கிண்டலடித்தார்கள்.
பார்த்திபன் இன்று காலை அவருடைய டுவிட்டரில், “இரண்டாம் பகுதி 28ல்..! என்னுடையப் பகுதி மிகுதியோ அல்லது குறைவோ(screen space) யாமறியோம்! Trailer-ஐ காண்கையில் குறைவாகவே இருப்பதாகத் தோன்றுகிறது. வானத்தில் பிறை போல அளவில் குறைவேயாயினும் நிறைய நட்சத்திரங்களுடன் பங்குப் போட்டு வானத்தை அழகாக்கியதில் மகிழ்வே! Max நண்பர்களோடு IMAX-ல் முதல் நாளே பார்க்கிறேன். திரையில் சந்திப்போம் நண்பர்களே !,” என அவருடைய காட்சிகள் குறைந்திருக்கலாம் என்ற குறையோடு பதிவிட்டுள்ளார்.