தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

சமீப காலமாக சோசியல் மீடியாவில் பிரபலங்கள் இறந்துவிட்டது போன்று பொய்யான செய்தி பரவி வருவது அதிகரித்து விட்டது. அந்த வகையில் நடிகர் பார்த்துக் கொண்டு இறந்து விட்டதாக யு டியூப்பில் ஒரு வீடியோ வெளியாகி உள்ளது. அதை பார்த்த பார்த்திபன் தனது கோபத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.
அவர் வெளியிட்டுள்ள செய்தியில், 'இதுபோன்ற செய்திகள் மரணம் அடைய வேண்டும். இதை தயாரிப்பவர்கள் தங்களின் வாய்க்கரிசிக்காக செய்தாலும் மற்றவர்களின் மனதை பிணமாக்கி அதை கொத்தி தின்னும் கேவலப் பிறவியாக வாழ வேண்டுமா? சம்பந்தப்பட்டவர்கள் குடும்பம் அது தாயும் தாரமும் பெற்றதுகளோ யோசிக்க வேண்டும். இது பலமுறை என்னை மட்டுமல்ல பலரையும் இறைவனடி சேர, சார்ட்டஸ்ட் ரூட் டிக்கெட் வாங்கி கொடுத்திருக்கிறார்கள். அவர்களாகவே திருந்த அந்த சுடுகாட்டு சுடலை சாமியும் ஆறாவது அறிவோ உதவ வேண்டும்' என்று பதிவிட்டு இருக்கிறார் பார்த்திபன்.