2025ல் 50 கோடியைக் கடந்த 10வது படம் 'தலைவன் தலைவி' | பாய் பிரண்ட் உடன் படப்பிடிப்புக்கு வரும் நடிகை | தமிழுக்காக 'வெயிட்டிங்' : சிரிக்கும் சினேகா | எல்லோருடைய வாழ்க்கையையும் வாழ ஆசை: மாசாந்த் நடராஜன் | பணம், புகழ் இருந்தாலும், நிம்மதி, கவுரவம் முக்கியம்: ரஜினிகாந்த் பேச்சு | ஜூன் ஜூலையில் பள்ளிகள் வேண்டாம் ; மலையாள இயக்குனர்கள் அரசுக்கு கோரிக்கை | மோகன்லாலும் மம்முட்டியும் கண்டுகொள்ளவில்லை ; பன்னீர் புஷ்பங்கள் சாந்தி கிருஷ்ணா வருத்தம் | ‛ஜனநாயகன்' படத்தில் நரேன் நடிக்கும் வேடம் இதுதான் | ‛கிச்சா' என்கிற பெயர் தன்னுடன் ஒட்டிக்கொண்டது எப்படி ? சுதீப் புதிய தகவல் | 'தீ' ரஜினியை ரி-க்ரியேட் செய்துள்ளாரா லோகேஷ்? |
திரைத்துறை, சின்னத்திரை, ஊடகம் என அனைத்திலும் பெண்களுக்கு எதிராக அட்ஜெஸ்மெண்ட் டார்ச்சர் இருக்கிறது. சமீபகாலங்களில் பெண்களும் தொடர்ந்து இதுகுறித்த சம்பவங்களை பொதுவெளியில் தைரியமாக பேசி வருகின்றனர். அண்மையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்து வரும் லாவண்யா தனக்கு நடந்த அட்ஜெஸ்மென்ட் டார்ச்சர் பற்றி கூறியிருந்த நிலையில், தற்போது அதே தொடரில் நடித்து வரும் தீபிகாவும் தனக்கு நடந்த சம்பவத்தை பகிர்ந்துள்ளார்.
சின்னத்திரை நடிகையாக வலம் வரும் வீஜே தீபிகா சில திரைப்படங்களிலும் சிறு ரோல்களிலும் நடித்துள்ளார். அந்த வகையில் ராகவா லாரன்ஸ் படத்தில் அவருக்கு தங்கையாக நடிக்க ஆடிஷனுக்கு சென்றுள்ளார். அப்போது அங்கே தனி ரூமில் ஒரு நபர் படத்தில் முத்த காட்சி இருப்பதாக கூறி தனக்கு முத்தம் கொடுத்து அதை நடித்துக் காட்டுமாறு கூறியுள்ளார். உடனே, தீபிகா அந்த ரோலில் நடிக்க முடியாது வேறு ரோல் கொடுக்க சொல்லி கேட்க, 'உனக்கு முன்னால் வந்த 8 பேர் கிஸ் பண்ணிட்டு போயிருக்காங்க. உனக்கு மட்டும் கிஸ் கொடுக்க முடியாதா?' என்று கேட்டுள்ளார்.
இதனால் அந்த படத்தின் வாய்ப்பை உதறி தள்ளியதாக வீஜே தீபிகா கூறியுள்ளார். நடிகைகள் இப்படி வரிசையாக அட்ஜெஸ்மென்ட் டார்ச்சர் பற்றி கூறி வருவது சோஷியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற செயல்களுக்கு தக்க நடவடிக்கை எடுத்து பெண்களை பாதுகாக்க வேண்டும் என்றும் கண்டனங்கள் எழுந்து வருகிறது.