துல்கர் சல்மானின் ‛காந்தா' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | கமல் படத்தில் இணைந்த பிரபல ஒளிப்பதிவாளர் | உஸ்தாத் பகத்சிங் படத்தின் படப்பிடிப்பை முடித்த பவன் கல்யாண் | பிளாஷ்பேக்: 'விமர்சனப் போட்டி' என்று விளம்பரம் செய்து, விடை தெரியாமல் போன “உலகம்” திரைப்படம் | 'ஹவுஸ் மேட்ஸ்' மூலம் தமிழுக்கு வரும் அர்ஷா பைஜு | ரஜினி நடிக்கும் கூலி படக்கதை என்ன? ஆகஸ்ட் 2ல் டிரைலரில் தெரியும்...! | குற்றம் கடிதல் 2 உருவாகிறது : கதைநாயகன் ஒரு நல்லாசிரியர் | ரத்து செய்யப்பட்ட இசை நிகழ்ச்சியை மீண்டும் நடத்தும் அனிருத் | பிளாஷ்பேக்: வில்லனை ஆதரித்த கமல் | பிறந்தநாளில் ரசிகர்கள் ஆசையை நிறைவேற்றிய தனுஷ் |
ஜீ தமிழில் ஒளிபரப்பான 'சரிகமபா' நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ரமணியம்மாள், வீட்டு வேலை செய்து பிழைத்து வந்தார். இவரது பாடும் திறமையை அறிந்த ஜீ தமிழ் தொலைக்காட்சி 'சரிகமபா' நிகழ்ச்சியில் பாட வாய்ப்பளித்தது. தனது திறமையால் பலரது உள்ளங்களை கொள்ளை கொண்ட ரமணியம்மாளுக்கு லட்சகணக்கானோர் ரசிகர்களாக உள்ளனர். ரமணியம்மாளுக்கு செல்லமாக ராக்ஸ்டார் ரமணியம்மாள் என்று செல்ல பெயரும் வைத்துள்ளனர்.
இந்நிலையில், 69 வயதான ரமணியம்மாள் நேற்று உடல்நலக் குறைவினால் காலமானார். அவரது மறைவு சின்னத்திரை பிரபலங்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு பிரபலங்களும் தங்களது சோஷியல் மீடியா பதிவுகளில் ரமணியம்மாளுக்காக இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சரிகமபா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய அர்ச்சனாவும் 'என் அன்பிற்குரிய ரமணி அம்மா! உங்கள் குரல் என்றும் எங்கள் உள்ளத்தில் வாழ்ந்து கொண்டே இருக்கும்' என்று பதிவிட்டிருந்தார். அதோடு நிற்காமல் ரமணியம்மாள் வீட்டிற்கு நேரில் சென்றும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.