கேரளாவை தொடர்ந்து ஹிந்தியிலும் சென்சார் போர்டு சிக்கலில் ஜானகி டைட்டில் | தமிழ் புத்தாண்டு தினத்தில் சூர்யாவுடன் மோதும் விஷால்! | என் படங்களுக்காக ரசிகர்களை எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்க வைப்பேன்! - விஷ்ணு விஷால் | விளையாட்டால் நிகழும் பிரச்னையே ‛கேம்' : சொல்கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத் | நெல் விவசாயத்தில் இறங்கிய நயன்தாரா பட இயக்குனர் | தெலுங்கில் முதல் முறையாக நுழைந்த அக்ஷய் கன்னா ; சுக்ராச்சாரியார் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் | கன்னட நடிகர் தர்ஷனுக்கு தனிமை சிறை ஏன்? நீதிமன்றத்தில் மனு தாக்கல் | 'திரிஷ்யம் 3' ; ஜீத்து ஜோசப் வெளியிட்ட முதல் புகைப்படம் | ஜீவாவின் 'தலைவர் தம்பி தலைமையில்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | காதலில் கரைபவர் வெகு சிலரே : தனுஷின் ‛தேரே இஷ்க் மே' டீசர் வெளியீடு |
நடிகை திவ்யா கணேஷ் பாக்கியலெட்சுமி தொடரில் ஜெனி என்கிற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதிகமாக சீரியல்கள் நடிக்கவில்லை என்றாலும் முன்னணி நடிகைகளுக்கு இணையாக சோஷியல் மீடியாக்களில் திவ்யாவுக்கு ரசிகர்கள் உள்ளனர். எந்தவொரு பிரச்னையையும் தைரியத்துடனும் தன்னம்பிக்கையுடனும் எதிர்கொண்டு வரும் திவ்யா, ஒரு முறை ஐதராபாத்திலிருந்து சென்னைக்கு விமானத்தில் பயணம் செய்த போது, திவ்யாவின் இடுப்பில் ஒரு நபர் கையை வைத்து சில்மிஷம் செய்துள்ளார்.
இதனால் கோபமடைந்த திவ்யா, விமானத்தில் அந்த இடத்தில் வைத்தே அந்நபரின் கன்னத்தில் நாலு அறை கொடுத்துள்ளார். இந்த சம்பவத்தை அண்மையில் பேட்டி ஒன்றில் கூறிய அவர், பெண்கள் இதுபோன்ற சம்பவங்களை சகித்துக்கொண்டு செல்லாமல் அப்போதே இதுபோன்ற அற்ப செயல் செய்பவர்களுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என அட்வைஸ் செய்துள்ளார். திவ்யாவின் தைரியமான இந்த செயலை தற்போது பலரும் பாராட்டி வருகின்றனர்.