வீட்டை வைத்து கடன் வாங்கி படம் தயாரித்ததுஏன்? ஆண்ட்ரியா | 'வாழு, வாழ விடுங்கள்': கிண்டல், கேலிகளுக்கு கீர்த்தி சுரேஷ் பதில் | அஜித் அடுத்த பட அறிவிப்பு - தொடரும் தாமதம் | மீண்டும் தெலுங்கு இயக்குனர் படத்தில் சூர்யா ? | 'மாஸ்க்': வாய்ப்பில்லாத ஆண்ட்ரியாவுக்கு வாய்ப்புகள் வருமா? | 50 வருட திரையுலக பயணத்தில் இருந்து ஓய்வு பெறும் நடிகை துளசி | 'மெமரிஸ்' இரண்டாம் பாகம் ; பிரித்விராஜ் விருப்பம் | பட விளம்பர மோசடி ; பெண் உள்ளிட்ட ஐவர் மீது நடிகர் யஷ்ஷின் தாயார் போலீசில் புகார் | இரண்டு நாளில் ஒரு மில்லியன் பார்வைகளைத் தொட்ட மஞ்சு வாரியரின் குறும்படம் | மோகன்லால் மம்முட்டி படங்களை பயன்படுத்தியதால் 2 வருட தடை விதித்தனர் ; இயக்குனர் வினயன் |

நடிகை மாளவிகா மோகனன் மலையாள திரையுலகில் இருந்து தமிழில் நுழைந்து ‛பேட்ட, மாஸ்டர்' படங்களில் நடித்ததன் மூலம் முன்னணி நடிகை வரிசைக்கு உயர்ந்தார். தொடர்ந்து தமிழ், மலையாளம், தற்போது தெலுங்கு என பிஸியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் படப்பிடிப்பு மற்றும் சுற்றுலா காரணங்களுக்காக அடிக்கடி விமான பயணங்களை மேற்கொண்டு வருகிறார் மாளவிகா மோகனன். அப்படி அவர் அதிகமாக பயன்படுத்துவது இண்டிகோ விமான சேவையை தான். ஆனால் எப்போதுமே அவர்களது விமானம் புறப்பாடு தாமதமாகத்தான் இருக்கிறது என்று தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார் மாளவிகா மோகனன்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஏன் இண்டிகோ விமான சேவையில் பத்துக்கு ஒன்பது விமானங்கள் எப்போதுமே தாமதமாகின்றன? விமானத்திற்குள் பயணிகளை அனுமதித்து அவர்களை உட்கார வைக்கிறோம் என்கிற பெயரில் ஒரு மணி நேரத்திற்கு மேல் தாமதப்படுத்தும் புதிய ட்ரெண்டை உருவாக்குகிறீர்கள். ஒருவேளை உங்களுக்கு விமானம் புறப்பட தாமதம் என்று அறிவிப்பு வந்தால் பயணிகளை விமானத்தில் அனுமதித்து அமர வைக்கும் அந்த வேலையையும் கொஞ்ச நேரம் கழித்து தாமதமாகவே செய்யலாமே ?” என்று கேள்வி எழுப்பி உள்ளார் மாளவிகா மோகனன்.