தென்தமிழகத்து இளைஞர்களின் கதை 'பைசன்': இயக்குனர் மாரி செல்வராஜ் | ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ் | மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு | கேரளாவை தொடர்ந்து ஹிந்தியிலும் சென்சார் போர்டு சிக்கலில் ஜானகி டைட்டில் | தமிழ் புத்தாண்டு தினத்தில் சூர்யாவுடன் மோதும் விஷால்! | என் படங்களுக்காக ரசிகர்களை எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்க வைப்பேன்! - விஷ்ணு விஷால் | விளையாட்டால் நிகழும் பிரச்னையே ‛கேம்' : சொல்கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத் | நெல் விவசாயத்தில் இறங்கிய நயன்தாரா பட இயக்குனர் | தெலுங்கில் முதல் முறையாக நுழைந்த அக்ஷய் கன்னா ; சுக்ராச்சாரியார் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் | கன்னட நடிகர் தர்ஷனுக்கு தனிமை சிறை ஏன்? நீதிமன்றத்தில் மனு தாக்கல் |
சின்னத்திரை நடிகையான திவ்யா கணேஷ் தற்போது பாக்கியலெட்சுமி தொடரில் ஜெனிபர் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியலில் இவருக்கு ஜோடியாக விகாஸ் சம்பத் நடித்து வருகிறார். சீரியலில் ஜோடியாக திரியும் இவர்கள் இருவரும் நிஜத்திலும் காதலித்து வருவதாக கடந்த சில நாட்களாக வதந்திகள் பரவி வந்தது. இந்நிலையில், திவ்யா கணேஷ் இது முற்றிலும் பொய்யான செய்தி என்று கூறியதோடு, 'எங்கள் இருவருக்கும் குடும்பங்கள் இருக்கிறது. எங்கள் குடும்பங்களை மனதில் வைத்துக்கொண்டு இவ்வாறான பொய் செய்திகளை பரப்புவதை முதலில் நிறுத்துங்கள். எனது கடந்த கால வாழ்க்கை குறித்தும் பேசாதீர்கள். அதை நான் மறக்கவே நினைக்கிறேன். இதை எனது வேண்டுகோளாக நினைத்து ரீச்சிற்காகவும், வியூஸ்காகவும் இது போன்ற போலியான செய்திகளை பரப்புவதை நிறுத்துங்கள்' என வேண்டுகோள் வைத்துள்ளார்.