துல்கர் சல்மானின் ‛காந்தா' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | கமல் படத்தில் இணைந்த பிரபல ஒளிப்பதிவாளர் | உஸ்தாத் பகத்சிங் படத்தின் படப்பிடிப்பை முடித்த பவன் கல்யாண் | பிளாஷ்பேக்: 'விமர்சனப் போட்டி' என்று விளம்பரம் செய்து, விடை தெரியாமல் போன “உலகம்” திரைப்படம் | 'ஹவுஸ் மேட்ஸ்' மூலம் தமிழுக்கு வரும் அர்ஷா பைஜு | ரஜினி நடிக்கும் கூலி படக்கதை என்ன? ஆகஸ்ட் 2ல் டிரைலரில் தெரியும்...! | குற்றம் கடிதல் 2 உருவாகிறது : கதைநாயகன் ஒரு நல்லாசிரியர் | ரத்து செய்யப்பட்ட இசை நிகழ்ச்சியை மீண்டும் நடத்தும் அனிருத் | பிளாஷ்பேக்: வில்லனை ஆதரித்த கமல் | பிறந்தநாளில் ரசிகர்கள் ஆசையை நிறைவேற்றிய தனுஷ் |
கவர்ச்சி நடிகையாக மட்டுமே பார்க்கப்பட்ட நடிகை ஷகீலாவை சக மனுஷியாக பார்க்க வைத்த நிகழ்ச்சி குக் வித் கோமாளி. அந்நிகழ்ச்சிக்கு பிறகு ஷகீலா கனிவான இதயமும் கொண்டவர் என்பதை புரிந்து கொண்ட பலரும் அவருக்கு ரசிகர்களாகிவிட்டனர். சில யூ-டியூப் நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும் வலம் வரும் ஷகீலா, சில சமூக பிரச்னைகள் குறித்தும் பேசி வருகிறார். அவர் அண்மையில் தனது ஏரியாவில் நடந்த பிரச்னைக்காக வீதியில் இறங்கி போராடியுள்ளார்.
தனது ஏரியாவில் உள்ள ஒரு குடியிருப்பில் குடும்பமாக வசித்து வருபவர்களுக்கு ரூ.2500, பேச்சிலர்ஸ்களுக்கு ரூ.9000 என பராமரிப்பு செலவாக வசூலித்து வந்தனர். அந்த தொகை செலுத்தப்படாத காரணத்தால் 40க்கும் மேற்பட்ட குடியிருப்புக்கு தண்ணீர் இணைப்பை துண்டித்துள்ளனர். இதன்காரணமாக அந்த குடியிருப்பில் வசித்து வந்த பேச்சிலர்ஸ் உட்பட பலரும் வீதியில் போராடியுள்ளனர். இதுகுறித்து அறிந்த ஷகீலா இரவு நடந்து அந்த போரட்டத்தில் பேச்சிலர்ஸ்க்கு ஆதரவாக களமிறங்கி போரடியுள்ளார். தனக்கு சற்றும் தொடர்பில்லாத விவகாரத்தில் தன்னலமற்று மக்களுக்காக போரடிய ஷகீலாவின் இந்த செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.