தோட்டா தரணிக்கு செவாலியே விருது | மீண்டும் ரஜினியை இயக்குவது போன்று கமலையும் இயக்குவீர்களா? சுந்தர்.சி கொடுத்த பதில் | நடிகர் அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் | ‛இன்று போய் நாளை வா' : கே.பாக்யராஜ் சொன்ன பிளாஷ்பேக் | ராஜமவுலி படத்தில் ஸ்ருதிஹாசன் பாடிய பாடல் வெளியீடு | ஓடிடியில் நேரடியாக வெளியாகும் ராதிகா ஆப்தே படம் | அனந்தா படத்தில் நடந்த அதிசயங்கள் : சத்யசாய்பாபா மகிமை சொன்ன சுரேஷ் கிருஷ்ணா | டப்பிங் பணிகளை துவங்கிய அபிஷன், அனஸ்வரா | தமிழகத்தில் வெளியாகும் ஆஸ்கர் பரிந்துரை படம் | அன்னை இல்லத்தில் இருந்து அடுத்து வாரிசு: ரஜினி ஆசி |

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக திகழ்ந்தவர் ஜெய்சங்கர். தென்னகத்து ஜேம்ஸ்பாண்ட் என அழைக்கப்பட்டார். கடந்த 2000ம் ஆண்டில் இவர் மறைந்தார். சென்னை, நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையில் இருந்த வீட்டில் பல ஆண்டுகள் வசித்தார் ஜெய்சங்கர். இவர் வீடு இருந்த கல்லூரி சாலைக்கு அவர் பெயரை சூட்ட வேண்டும் என ஜெய்சங்கர் மகனான டாக்டர் விஜயசங்கர், முதல்வரிடம் கோரிக்கை விடுத்தார்.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி கூட்டத்தில் கடந்த ஜூலை 30ம் தேதி தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையை ‛ஜெய்சங்கர் சாலை' என பெயர் மாற்றப்பட்டு அரசாணையும் வெளியிடப்பட்டது.
இந்நிலையில் ‛ஜெய் சங்கர் சாலை' இன்று திறக்கப்பட்டது. சென்னை, தலைமை செயலகத்தில் இருந்தபடி முதல்வர் ஸ்டாலின் இதை காணொளி வாயிலாக திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் ஜெய்சங்கர் மகன் டாக்டர் விஜயசங்கர் உள்ளிட்ட குடும்பத்தினர் பங்கேற்றனர்.
இதேப்போல் சென்னை, மந்தைவெளிப்பாக்கம் 5வது குறுக்கு தெருவிற்கு நாடக நடிகர் எஸ்வி வெங்கடராமன் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த சாலையையும் முதல்வர் திறந்து வைத்தார்.




