Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை | டாக்டர் ஆக ஆசைப்பட்ட ஹீரோயின் | அமானுஷ்ய படத்தில் நட்டி : வரலாற்று பின்னணியில் உருவாகும் ‛நீலி' | ஜூலை 4ல் 7 படம் ரிலீஸ்... எந்த படம் ஓடுது | சினிமாவில் நடக்கும் அநியாயங்களை பேசியதால் வாய்ப்பில்லை, சமையல் செய்து பிழைக்கிறேன் : ஸ்ரீரெட்டி புலம்பல் | பிளாஷ்பேக் : 40 ஆண்டுகளுக்கு முன்பே நடிகரான கஸ்தூரி ராஜா | பிளாஷ்பேக் : தமிழில் டப் ஆன முதல் மலையாள படம் | எனது கேரக்டர் குறித்த பயம், பதற்றம் இருந்தது : ‛லவ் மேரேஜ்' சுஷ்மிதா பட் | கவுதமியிடம் அமலாக்கத்துறை 7 மணி நேரம் விசாரணை |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிளாஷ்பேக்: ஜெய்சங்கர் வீட்டில் வேலை பார்த்த நடிகர்

05 ஜூலை, 2025 - 11:06 IST
எழுத்தின் அளவு:
Flashback-The-actor-who-worked-at-Jaishankars-house

சினிமா வாய்ப்பு தேடி சென்னை வந்த பலரும் ஓட்டலில், அல்லது கடையில் அல்லது ஒரு அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி இருப்பார்கள். ஆனால் ஒருவர் ஜெய்சங்கர் வீட்டில் வேலை பார்த்திருக்கிறார் அவர் குள்ளமணி.

புதுக்கோட்டை மாவட்டம் அரிமளத்தை சேர்ந்த குள்ளமணி 6ம் வகுப்பு வரை படித்தார். அவரது உயரக்குறைவை பலரும் கிண்டல் செய்யவே, சினிமா அல்லது சர்க்கசில் சேர்ந்து விடலாம் என்று சென்னை வந்தார். வந்த இடத்தில் வாய்ப்புகள் எதுவும் கிடைக்காததால் ஆர்ய பவன் ஓட்டலில் கிளீனராக வேலை பார்த்தார்.

ஓட்டலுக்கு சாப்பிட வந்த இயக்குனர் தூயவன் அவரை ஜெய் சங்கர் வீட்டில் வேலைக்கு சேர்த்து விட்டார். சில ஆண்டுகள் அந்த வீட்டில் ஒருவராக இருந்தார். ஜெய்சங்கரும், அவரது அம்மாவும் அவரை தங்கள் வீட்டு பிள்ளைபோல பார்த்துக் கொண்டார்கள். ஜெய்சங்கர் நடிக்கும் நாடகங்களில் சின்ன சின்ன வேடத்தில் நடிக்க தொடங்கினார்.

பின்னர் 'நவாப் நாற்காலி' என்ற படத்தில் நாகேசின் தம்பியாக நடித்து சினிமாவில் அறிமுகமானார். 'பொய்சாட்சி' படப்பிடிப்பை வேடிக்கை பார்க்க போன இடத்தில் கே.பாக்யராஜை சந்திக்க அவர் தனது படங்களில் வாய்ப்பு கொடுத்தார்.

'ஸ்ரீதேவி' என்ற படத்தில் மனித குரங்காக நடித்தபோது மரம் விட்டு மரம் தாவியதில் தவறி கீழே விழுந்து பல மாதங்கள் வேலை இல்லாமல் இருந்தார். அப்போது பண உதவி செய்து கவனித்தவர் ஜெய்சங்கர். 500 படங்களில் நடித்த குள்ளமணி 30வது வயதில் திருமணம் செய்து கொண்டார். 2013ம் ஆண்டு தனது 61வது வயதில் காலமானார். தனது வீட்டில் ஜெய்சங்கர் படத்தை வைத்து தெய்வமாக வணங்கி வந்தவர் குள்ளமணி.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பிளாஷ்பேக்: சினிமாவான துப்பறியும் நாவல்பிளாஷ்பேக்: சினிமாவான துப்பறியும் ... சிரஞ்சீவியுடன் கவர்ச்சி ஆட்டம் போடும் மவுனி ராய் சிரஞ்சீவியுடன் கவர்ச்சி ஆட்டம் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in