பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
சின்னத்திரை நடிகையான அனு சில சீரியல்களில் நெகட்டிவ் ரோல்களில் நடிப்பில் மிரட்டி வந்தார். கடைசியாக பாண்டவர் இல்லம் தொடரில் நடித்து வந்த போது அவர் கர்ப்பமாக இருந்ததால் அந்த சீரியலிலிருந்து பாதியிலேயே வெளியேறினார். அண்மையில் அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்த அனு, பிரசவ வேதனையின் போது தனது கணவர் உறுதுணையாய் தன்னுடன் இருந்ததை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்திருந்தார்.
தற்போது தன் மகனுக்கு தூய தமிழில் ‛வான் வியன்' என்று பெயர் சூட்டியுள்ளார். மேலும், தன் மகனுக்காக அழகான கவிதை எழுதியும், ரசிகர்களிடம் ஆசி கேட்டும் அவர் செய்துள்ள செயல் பலரையும் வியப்பிலும் நெகிழ்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது. சீரியலில் வில்லியாக இருந்தாலும் நிஜத்தில் அழகிய தமிழ் மகள் என பலரையும் உருக செய்துள்ள அனுவையும், அவரது மகன் வான் வியனையும் வாழ்வாங்கு வாழ வேண்டுமென பலரும் வாழ்த்தி வருகின்றனர்.