பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

நடிகை மாளவிகா மோகனன் தமிழில் 'பேட்ட, மாஸ்டர்' என ரஜினி, விஜய் படங்களில் நடித்ததை தொடர்ந்து பிரபலமான நடிகையாக மாறினார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு விக்ரமுடன் இணைந்து 'தங்கலான்' படத்தில் நடித்திருந்த மாளவிகா மோகனன் சமீபத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான 'ஹிருதயபூர்வம்' படத்திலும் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர் முதன் முறையாக கதாநாயகியாக அறிமுகமானது துல்கர் சல்மான் ஜோடியாக 'பட்டம் போலே' என்கிற திரைப்படத்தில் தான்.
பிரபல ஒளிப்பதிவாளர் கே யு மோகனன் என்பவரின் மகளாக இருந்தாலும் இந்த முதல் படத்திற்காக ஆடிஷன் செய்துதான் அவர் தேர்வு செய்யப்பட்டார். அப்படி அவரை உதவி ஆடிஷன் செய்தது நடிகர் மம்முட்டி தான் என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் மாளவிகா மோகனன்.
இது குறித்து மம்முட்டி ஆடிஷன் செய்வது போன்று அவர் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து கொண்டு மாளவிகா மோகனன் கூறும்போது, “என்னுடைய முதல் ஆடிசன் இதுதான். யாருக்காவது இப்படி ஒரு ஜாம்பவான் நடிகர் தனது ஆடிசனுக்கான புகைப்படத்தை எடுக்கும் வாய்ப்பு கிடைத்திருக்குமா ? ஆனால் எனக்கு நடந்தது. பட்டம் போலே படத்திற்கு கதாநாயகி வேண்டும் என தேடிய போது என்னை ஒரு படப்பிடிப்பு தளத்திற்கு வரவைத்து மம்முட்டி தான் புகைப்படம் எடுத்தார். அவர்தான் அந்த படத்தில் என்னை நடிப்பதற்கு ஓகே சொன்னார்” என்று கூறியுள்ளார்.