கூலி: அமெரிக்காவில் 7 மில்லியன் வசூல் | ரஜினி, கமல் இணையும் படத்தில் சூர்யா நடிக்கிறாரா? | விபத்தில் சிக்கியதாக பரவிய வதந்தி: விளக்கமளித்து முற்றுப்புள்ளி வைத்த காஜல் அகர்வால் | அனுமதியின்றி தன் பெயர், படத்தை பயன்படுத்தக்கூடாது: ஐஸ்வர்யா ராய் வழக்கு | சிவகார்த்திகேயன் அடுத்து நடிக்க போகும் 3 படங்கள் விபரம் | பிரபாஸ் பிறந்தநாளில் ‛தி ராஜா சாப்' படத்தின் முதல் பாடல் | செப்., 13ல் இளையராஜாவிற்கு தமிழக அரசு சார்பில் பிரமாண்ட பாராட்டு விழா | அல்லு அர்ஜூனை பார்த்து வியந்த ‛டிராகன்' பட இயக்குனர் | தன் முதல் தமிழ் படக்குழுவினருடன் பிறந்தநாளை கொண்டாடிய அனஸ்வரா ராஜன் | கல்கி 2ம் பாகத்தில் எனக்கு வாய்ப்பு கிடைக்குமா ? கல்யாணி பிரியதர்ஷன் ஆர்வம் |
மலையாள திரையுலகில் திறமையான இயக்குனராக 'கோதா, மின்னல் முரளி' என தனது சில படங்களிலேயே வெற்றி முகம் கண்டவர் இயக்குனர் பஷில் ஜோசப். அதேசமயம் கடந்த சில வருடங்களாகவே டைரக்ஷனை ஒதுக்கி வைத்து விட்டு பிசியான நடிகராக பல படங்களில் நடித்து வருகிறார். குறிப்பாக நெகட்டிவ் கலந்த கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார்.
இந்த நிலையில் சமீபத்தில் மலையாளத்தில் கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் சூப்பர் உமன் கதையம்சம் கொண்ட 'லோகா சாப்டர் 1 சந்திரா' என்கிற திரைப்படம் வெளியானது. இதில் கதாநாயகனாக இளம் நடிகர் நஸ்லேன் நடித்துள்ளார். தவிற முக்கிய கதாபாத்திரங்களில் போலீஸ் அதிகாரியாக நடன இயக்குனர் சாண்டியும் இன்னொரு சிறப்பு தோற்றத்தில் நடிகர் டொவினோ தாமஸும் நடித்திருந்தனர்.
இந்த நிலையில் நடிகர் பஷில் ஜோசப் ஒரு பேட்டியில் கூறும்போது, “இயக்குனர் டொமினிக் அருண் இந்த படத்தின் கதை முழுவதையும் என்னிடம் சொல்லி இதில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் என்னை நடிக்கும்படி கேட்டார். ஆனால் சில காரணங்களால் என்னால் அதில் நடிக்க முடியாமல் போனது. அதில் வேறு ஒருவர் நடித்துள்ளார். அது எந்த கதாபாத்திரம் என நான் கூற விரும்பவில்லை. படம் வெளியானபின் தான் அதில் நடித்திருக்கலாமோ என தோன்றியது” என்று கூறியுள்ளார்.
ஆனாலும் ரசிகர்கள் இவர் நடிக்க மிஸ் பண்ணியது சாண்டி நடித்த போலீஸ் கதாபாத்திரத்திமா அல்லது கல்யாணியை காப்பாற்ற திடீரென சிறப்பு தோற்றத்தில் தோன்றும் டொவினோ தாமஸ் கதாபாத்திரத்திமா என விவாதம் நடத்தி வருகிறார்கள்.