பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

மலையாள திரையுலகில் திறமையான இயக்குனராக 'கோதா, மின்னல் முரளி' என தனது சில படங்களிலேயே வெற்றி முகம் கண்டவர் இயக்குனர் பஷில் ஜோசப். அதேசமயம் கடந்த சில வருடங்களாகவே டைரக்ஷனை ஒதுக்கி வைத்து விட்டு பிசியான நடிகராக பல படங்களில் நடித்து வருகிறார். குறிப்பாக நெகட்டிவ் கலந்த கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார்.
இந்த நிலையில் சமீபத்தில் மலையாளத்தில் கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் சூப்பர் உமன் கதையம்சம் கொண்ட 'லோகா சாப்டர் 1 சந்திரா' என்கிற திரைப்படம் வெளியானது. இதில் கதாநாயகனாக இளம் நடிகர் நஸ்லேன் நடித்துள்ளார். தவிற முக்கிய கதாபாத்திரங்களில் போலீஸ் அதிகாரியாக நடன இயக்குனர் சாண்டியும் இன்னொரு சிறப்பு தோற்றத்தில் நடிகர் டொவினோ தாமஸும் நடித்திருந்தனர்.
இந்த நிலையில் நடிகர் பஷில் ஜோசப் ஒரு பேட்டியில் கூறும்போது, “இயக்குனர் டொமினிக் அருண் இந்த படத்தின் கதை முழுவதையும் என்னிடம் சொல்லி இதில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் என்னை நடிக்கும்படி கேட்டார். ஆனால் சில காரணங்களால் என்னால் அதில் நடிக்க முடியாமல் போனது. அதில் வேறு ஒருவர் நடித்துள்ளார். அது எந்த கதாபாத்திரம் என நான் கூற விரும்பவில்லை. படம் வெளியானபின் தான் அதில் நடித்திருக்கலாமோ என தோன்றியது” என்று கூறியுள்ளார்.
ஆனாலும் ரசிகர்கள் இவர் நடிக்க மிஸ் பண்ணியது சாண்டி நடித்த போலீஸ் கதாபாத்திரத்திமா அல்லது கல்யாணியை காப்பாற்ற திடீரென சிறப்பு தோற்றத்தில் தோன்றும் டொவினோ தாமஸ் கதாபாத்திரத்திமா என விவாதம் நடத்தி வருகிறார்கள்.