நாகார்ஜுனா 100வது படத்தில் இணைந்த நடிகை சுஷ்மிதா பட்! | ‛வா வாத்தியார்' டைட்டிலின் பின்னணி ; ஆனந்தராஜ் சொன்ன தகவல் | தனுஷ் பட ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த மரியாதை | கவுதம் ராம் கார்த்திக்கின் ‛ரூட்' படத்தின் முழு படப்பிடிப்பும் நிறைவு பெற்றது! | சத்ய சாய் பாபா படத்தை இயக்கும் சுரேஷ் கிருஷ்ணா! | 'பெத்தி' படத்திலிருந்து ஜான்வி கபூர் முதல் பார்வை வெளியானது! | ‛மேயாத மான்' ரத்னகுமார் படத்தை தயாரிக்கும் இயக்குனர்கள்! | வாரிசு பட இயக்குனரின் அடுத்த படத்தில் நடந்த ட்விஸ்ட்! | கமல் பிறந்தநாளில் ரஜினி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்! | டப்பிங்கில் இவ்வளவு விஷயங்களா? விளக்குகிறார் ஷ்யாம் குமார் |

கடந்த சில வருடங்களாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மெகாதொடர் 'மகாநதி'. இந்த தொடரில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் இளம் நடிகை ஷாதிகா. இவர் 'நான் மகான் அல்ல, நெஞ்சில் துணிவிருந்தால்' உள்ளிட்ட சில படங்களிலும் நடித்துள்ளார்.
தற்போது ஷாதிகா அளித்த பேட்டியில், மகாநதி தொடரில் நடித்தபோது இருந்த தயக்கம் குறித்து அவர் கூறியதாவது, "மகாநதி சீரியலில் ராகினி கதாபாத்திரத்தில் கமிட் ஆகும் போது எனக்கு இது இவ்ளோ பெரிய நெகட்டிவ் கதாபாத்திரம் என தெரியாது. நான் சீரியலில் நடிக்கும் போது இந்த மாதிரி யாரும் என்னை மோசமாக திட்டியதில்லை. திடீரென்று அவ்வளவு வெறுப்பு பார்க்கவும் ரொம்ப பயந்துட்டேன். இது நமக்கு செட் ஆகுதா, இல்லையா என குழப்பமா இருந்தது. நான் ரொம்ப சென்சிடிவ் ஆன கேரக்டர். சமூக வலைதளங்களில் கமென்ட்களை படித்துவிட்டுச் இயக்குனர் பிரவீன் சார்கிட்ட சீரியலில் இருந்து விலகிக்கிறேன் என்றெல்லாம் கூறினேன். அவர், கமென்ட் எல்லாம் மனதில் வச்சுகாதீங்க விடுங்க என கூறி என்னை ஆறுதல் படுத்தினார்" எனக் கூறினார்.