துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் |
என்றும் மார்க்கண்டேயன் என அழைக்கப்படுவதற்கு தகுதியான நபராக இப்போது வரை இளமை துள்ளலுடன் வளம் வருபவர் நடிகர் நாகார்ஜுனா. அவரது நடிப்பில் இந்த வருடம் ‛குபேரா, கூலி' என இரண்டு படங்கள் வெளியாகி வரவேற்பை பெற்றன. இந்த இரண்டு படங்களிலும் வில்லத்தனம் வாய்ந்த கதாபாத்திரத்தில் நாகார்ஜுனா நடித்திருந்தார். இந்த நிலையில் தற்போது அவரது நூறாவது படம் தற்காலிகமாக ‛கிங் 100' என தலைப்பிடப்பட்டு படப்பிடிப்பு துவங்க இருக்கிறது. நித்தம் ஒரு வானம், ஆகாசம் போன்ற படங்களை இயக்கிய தமிழ் இயக்குனர் ரா. கார்த்திக் இப்படத்தை இயக்குகிறார்.
இந்த நிலையில் இந்த படத்திற்கு ‛லாட்டரி கிங்' என டைட்டில் வைக்கப்பட இருப்பதாக ஒரு செய்தி, தெலுங்கு திரையுலகில் பரவி வருகிறது. அதுமட்டுமல்ல நாகார்ஜுனாவின் நூறாவது படம் என்பதால் இதில் அவரது மகன்களான நாகசைதன்யா மற்றும் அகில் இருவரும் சிறப்பு தோற்றத்தில் இணைந்து நடிக்க இருக்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது.
இதற்கு முன்பாக கடந்த சில வருடங்களுக்கு முன்பு ‛மனம்' என்கிற படத்தில் நாகார்ஜுனா அவரது தந்தை நாகேஸ்வர ராவ், மகன் நாகசைதன்யா மூவரும் இணைந்து நடித்திருந்தனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று தலைமுறையினர் ஒரு படத்தில் நடித்திருப்பது சினிமா வரலாற்றில் முக்கிய பதிவாகவும் மாறி உள்ளது. அதேபோல தனது நூறாவது படத்தில் தனது இரண்டு மகன்களும் இடம் பெற வேண்டும் என நாகார்ஜுனா விரும்புகிறார் என்றும் சொல்லப்படுகிறது.