ஒல்லியானவள் என கிண்டல் அடிப்பவர்களுக்கு சமந்தா சவால் | அஜித், ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணி படத்தைத் தயாரிக்கப் போவது யார் ? | பாரா ஸ்விம்மிங் வீரரை படப்பிடிப்பு தளத்திற்கு அழைத்து பாராட்டிய ரஜினிகாந்த் | சுரேஷ்கோபி படத்துக்காக ஒரு ஊரே ஒரு வாரத்திற்கு திருவிழா கோலத்துக்கு மாறியது | தக் லைப் நடிகருக்கு பதிலடி கொடுத்து வெளியிட்ட பதிவை நீக்கிய இயக்குனர் | இந்திய திரைப்படத்திற்கான அங்கீகாரம் : கமல் | கல்கி 2898 ஏடி ஓராண்டு நிறைவு : அமிதாப்பச்சன் வெளியிட்ட பதிவு | சொர்க்கத்தில் இன்னொரு நாள் : சுற்றலா கொண்டாட்டத்தில் சூர்யா, ஜோதிகா | டூரிஸ்ட் பேமிலி படத்தின் மொத்த வசூல் வெளியானது | சமந்தா, கீர்த்தி சுரேஷ் திடீர் சந்திப்பு |
நடிகை சமந்தா முன்னணி நடிகையாக நடித்துக்கொண்டிருந்தபோதே தன்னுடன் நடித்த தெலுங்கு திரையுலகின் வாரிசு நடிகர் நாகசைதன்யாவை காதல் திருமணம் செய்து கொண்டார். சில வருடங்கள் மட்டுமே நீடித்த அவர்களது இல்லற வாழ்க்கை இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சீக்கிரமே முடிவுக்கு வந்தது. இதைத்தொடர்ந்து கணவர் நாகசைதன்யாவை பிரிந்து வாழும் சமந்தா, அதன்பின்னர் கணவர் மற்றும் மாமனார் நாகார்ஜுனா ஆகியோர் பற்றி எந்த ஒரு இடத்திலும் பேசுவது இல்லை. நாகார்ஜுனா படங்கள் வெளியாகும்போது கூட வாழ்த்துக்களும் தெரிவிக்காமல் மவுனம் காத்து வந்தார்.
இந்த நிலையில் நாகசைதன்யாவின் தம்பியும் தனது மைத்துனருமான நடிகர் அகிலுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார் சமந்தா. அகில் தற்போது தெலுங்கில் சுரேந்தர் ரெட்டி இயக்கத்தில் நடித்துள்ள படம் ‛ஏஜென்ட்'. ராணுவ பின்னணியில் உருவாகியுள்ள இந்த படத்தில் நடிகர் மம்முட்டி மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில் இந்த படம் வரும் ஏப்ரல் 28ம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிப்பு வெளியானது.
இந்த தகவலை, “காட்டு விலங்கு ஒன்று ஏப்ரல் 28ல் தியேட்டர்களுக்கு வந்து கொண்டிருக்கிறது.. உஷாராக இருங்கள்” என்று மகிழ்ச்சியுடன் தனது சோசியல் மீடியா பக்கத்தில் அகில் பகிர்ந்து கொண்டார். அவரது பதிவுக்கு கீழே அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக “பீஸ்ட் மோட் ஆன்” (மிருகத்தனம் ஆரம்பம்) என்கிற வார்த்தைகளை குறிப்பிட்டு வாழ்த்தி உள்ளார் நடிகை சமந்தா.