ராம்சரண் ஒரு உண்மையான ஜென்டில்மேன் என்கிறார் ஜான்வி கபூர்! | இட்லிகடை படத்தின் முதல் நாள் வசூல்? 100 கோடியை அள்ளுமா? | விஜயை கைது செய்யணுமா? நடிகர் பார்த்திபன் பதில் இதுதான் | டிச.,5ல் ரிலீசாகும் பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2: தாண்டவம்' | தென்தமிழகத்து இளைஞர்களின் கதை 'பைசன்': இயக்குனர் மாரி செல்வராஜ் | ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ் | மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு | கேரளாவை தொடர்ந்து ஹிந்தியிலும் சென்சார் போர்டு சிக்கலில் ஜானகி டைட்டில் | தமிழ் புத்தாண்டு தினத்தில் சூர்யாவுடன் மோதும் விஷால்! | என் படங்களுக்காக ரசிகர்களை எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்க வைப்பேன்! - விஷ்ணு விஷால் |
2009ல் வெளியான ‛வைகை' படம் மூலம் தமிழில் அறிமுகமானார் நடிகை சுவாசிகா. அதன்பின் சில படங்களில் நடித்தாலும் கடந்தாண்டு வெளியான ‛லப்பர் பந்து' அவரை பிரபலமாக்கியது. தொடர்ந்து மாமன், ரெட்ரோ போன்ற படங்களில் நடித்தார். தற்போது கருப்பு படத்தில் நடித்துள்ளார். சினிமா படங்கள், வெப்சீரிஸ் இரண்டிலும் கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் நடிக்கிறார்.
சினிமாவில் நடக்கும் பாலியல் தொந்தரவு தொடர்பாக இவர் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது ‛‛15 ஆண்டுகளாக இந்த துறையில் உள்ளேன். நான் அதுபோன்று எந்த பிரச்னையையும் சந்திக்கவில்லை. இந்த பிரச்னை சினிமாவில் மட்டுமல்ல எல்லா துறைகளிலும் நடக்கிறது. இதை தடுக்க கடுமையான சட்டங்கள் வேண்டும். பெண்கள் வாழ்வில் முன்னேற தைரியமாக இருக்க வேண்டும். எந்த இடத்திலும் வளைந்து செல்லக்கூடாது. ஒருவராக தவறாக நடக்க முயன்றால் அவர்களை எதிர்கொள்ளவும், சமூகத்தின் முன் நிறுத்தவும் தயங்க கூடாது'' என்றார்.