நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
கடந்த வாரம் சூரி நடிப்பில் குடும்ப கதையம்சத்துடன் அதுவும் தாய்மாமன் என்கிற உறவு முறையை உயர்த்தி பிடிக்கும் விதமாக மாமன் என்கிற படம் வெளியானது. இந்த படத்தில் சூரியின் அக்காவாக சுவாசிகாவும், சூரியின் மனைவியாக ஐஸ்வர்ய லட்சுமியும் நடித்திருந்தனர். பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கியிருந்தார். லப்பர் பந்து படத்தில் நடித்ததன் மூலம் நடிகை சுவாசிகா இந்தப்படத்திலும் பிரமாதமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் அதேசமயம் ஐஸ்வர்ய லட்சுமிக்கும் படத்தில் குறை சொல்லும்படியான கதாபாத்திரம் இல்லை. அவரும் நன்றாகவே நடித்திருந்தார்.
ஆனாலும் அவருக்கு தனது நடிப்பின் மீது கொஞ்சம் சந்தேகம் இருந்துள்ளது. ஒருநாள் நள்ளிரவு 3 மணி அளவில் சக நடிகையான சுவாசிகாவுக்கு மெசேஜ் செய்து, “நான் நல்ல நடிகை என்று நினைக்கிறீர்களா? இப்போது என்னுடைய வேலையை நான் சரியாக செய்து வருகிறேனா?” என்று கேட்டுள்ளார். இந்த தகவலை கேரளாவில் சமீபத்தில் நடைபெற்ற மாமன் பட புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் பகிர்ந்து கொண்டுள்ளார் சுவாசிகா. அப்போது உடன் பங்கேற்ற நடிகர் சூரி, “இப்படி ஒவ்வொரு கலைஞர்களுக்கும் இதுபோன்ற சந்தேகங்கள் எழுவது இயல்பான ஒன்றுதான். ஐஸ்வர்ய லட்சுமி நிச்சயமாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்” என்று தன் பங்கிற்கு பாராட்டை தெரிவித்தார்.