'பெத்தி' படத்தில் சிவராஜ் குமார் முதல் பார்வை வெளியீடு | ‛பரியேறும் பெருமாள்' ஹிந்தி ரீ மேக்கான ‛தடக் 2' டிரைலர் வெளியீடு, ஆக., 1ல் ரிலீஸ் | சிவகார்த்திகேயன் 24வது படம் தள்ளிப்போகிறதா? | தனுஷ் 54வது படத்தில் இணைந்தது குறித்து பிரித்வி பாண்டியராஜன் நெகிழ்ச்சி! | சிவராஜ் குமாரின் 131வது படம் அறிவிப்பு | 'லியோ'வில் என்னை வீணாக்கினார் லோகேஷ் : சஞ்சய் தத் கமெண்ட் | 68 வயதில் 3 நடிகைகளுடன் டான்ஸ் : கெட்ட ஆட்டம் போட்ட மொட்ட ராஜேந்திரன் | ஆடி வெள்ளி ரீமேக்கில் நயன்தாராவுக்கு பதில் திரிஷா | இளையராஜா வீட்டு மருமகள் ஆகி இருக்கணும்... : புது குண்டு போட்ட வனிதா, நடந்தது என்ன? | அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது : சொல்கிறார் நடிகர் ரஜினி |
கடந்த வாரம் சூரி நடிப்பில் குடும்ப கதையம்சத்துடன் அதுவும் தாய்மாமன் என்கிற உறவு முறையை உயர்த்தி பிடிக்கும் விதமாக மாமன் என்கிற படம் வெளியானது. இந்த படத்தில் சூரியின் அக்காவாக சுவாசிகாவும், சூரியின் மனைவியாக ஐஸ்வர்ய லட்சுமியும் நடித்திருந்தனர். பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கியிருந்தார். லப்பர் பந்து படத்தில் நடித்ததன் மூலம் நடிகை சுவாசிகா இந்தப்படத்திலும் பிரமாதமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் அதேசமயம் ஐஸ்வர்ய லட்சுமிக்கும் படத்தில் குறை சொல்லும்படியான கதாபாத்திரம் இல்லை. அவரும் நன்றாகவே நடித்திருந்தார்.
ஆனாலும் அவருக்கு தனது நடிப்பின் மீது கொஞ்சம் சந்தேகம் இருந்துள்ளது. ஒருநாள் நள்ளிரவு 3 மணி அளவில் சக நடிகையான சுவாசிகாவுக்கு மெசேஜ் செய்து, “நான் நல்ல நடிகை என்று நினைக்கிறீர்களா? இப்போது என்னுடைய வேலையை நான் சரியாக செய்து வருகிறேனா?” என்று கேட்டுள்ளார். இந்த தகவலை கேரளாவில் சமீபத்தில் நடைபெற்ற மாமன் பட புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் பகிர்ந்து கொண்டுள்ளார் சுவாசிகா. அப்போது உடன் பங்கேற்ற நடிகர் சூரி, “இப்படி ஒவ்வொரு கலைஞர்களுக்கும் இதுபோன்ற சந்தேகங்கள் எழுவது இயல்பான ஒன்றுதான். ஐஸ்வர்ய லட்சுமி நிச்சயமாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்” என்று தன் பங்கிற்கு பாராட்டை தெரிவித்தார்.