தீபாவளிக்கு வெளியாகும் 'கருப்பு' படத்தின் முதல் பாடல்! | கார்த்தி, விஜய் சேதுபதி போன்ற நடிகர்களால் தான் நல்ல கதை பெரிய படமாக வருகிறது! நலன் குமாரசாமி | சம்பளத்தை குறைத்து கொண்ட விக்ரம்! | ஹ்ரித்திக் ரோஷன் தயாரிப்பில் உருவாகும் புதிய வெப் தொடர் | அர்ஜுன் படத்தின் புதிய அப்டேட்! | 'சீன்'களை திருடும் இயக்குனர் | நான் ‛அப்புக்குட்டி' ஆனது இப்படித்தான் | ரசிகர்கள் 'இன்டலிஜென்ட்': சாய் பிரியா சர்டிபிகேட் | பிளாஷ்பேக்: ஒரு செல்லாத ரூபாயின் கதை தந்த யோசனை, என் எஸ் கிருஷ்ணனின் “பணம்” திரைப்படம் | தில்லானா மோகனாம்பாள், அவ்வை சண்முகி, ஜெயிலர் - ஞாயிறு திரைப்படங்கள் |
மலையாளத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக அறிமுகமான நடிகை மாளவிகா மோகனன், சில வருடங்கள் படங்கள் எதுவும் நடிக்காமல் இருந்தார். தமிழில் ரஜினிகாந்த் நடித்த ‛பேட்ட', விஜய்யின் ‛மாஸ்டர்' என தொடர்ந்து முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்று தென்னிந்திய அளவில் பிரபலமானார். அதன்பிறகு சில படங்களில் நடித்தாலும் இடையில் ஒரு தேக்க நிலை ஏற்பட்டது. அதை தொடர்ந்து கடந்த வருடம் வெளியான ‛தங்கலான்' படத்தின் மூலம் மீண்டும் விறுவிறுப்பாக தனது அடுத்த இன்னிங்ஸை துவங்கியுள்ளார்.
அந்த வகையில் தற்போது தெலுங்கில் பிரபாஸ் ஜோடியாக ‛ராஜா சாப்' படத்தில் நடித்துள்ளார். மலையாளத்தில் மோகன்லாலுடன் இணைந்து ‛ஹிருதயபூர்வம்' என்கிற படத்திலும் நடித்து முடித்துவிட்டார். தமிழில் மித்ரன் இயக்கத்தில் கார்த்தியுடன் இணைந்து ‛சர்தார் 2' படத்தில் நடித்து வருகிறார் மாளவிகா மோகனன். சமீபத்தில் சோசியல் மீடியாவில் ரசிகர்களுடன் உரையாடிய இவர், ‛‛சர்தார் 2 படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டது. வரும் ஜூன் மாதத்தில் படப்பிடிப்பு முடிவடைந்து விடும். தமிழில் அடுத்து நான் நடிக்கும் படம் குறித்து அதன் பிறகு அறிவிக்கிறேன்,'' என்று கூறியுள்ளார் மாளவிகா மோகனன்.