தனுஷ், மோகன்லால் கூட்டணியை உருவாக்க முயற்சி | மீண்டும் தயாரிப்பில் களமிறங்கும் ஹிருத்திக் ரோஷன் | முகேன் ராவ் நடிக்கும் புதிய படம் நிறம் | காந்தி கண்ணாடி முதல் மதராஸி வரை.... ஒவ்வொன்னுன் செம வொர்த்.... இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | மும்பையில் புதிய வீடு வாங்கி குடியேறிய சமந்தா | அப்பா தம்பி ராமயைா கதை எழுத, மகன் உமாபதி இயக்கும் படம் | செல்லப்பிராணி, குழந்தை அன்பை விவரிக்கும் ‛கிகி கொகொ' | தீபாவளிக்கு 'டியூட்' மட்டும் தானா? : பிரதீப் ரங்கநாதன் தகவல் | மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா | மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ? |
சினிமாவில் நடிக்க வைப்பதாகக் கூறி 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் பிரபல மலையாள நடிகை மினு முனீர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சீரியலில் நடிக்க வைப்பதாகக் கூறி 10 ஆண்டுகளுக்கு முன்பு 14 வயது சிறுமியை பிரபல மலையாள நடிகை மினு முனீர் சென்னை அழைத்து வந்துள்ளார். அங்கு சிறுமியிடம் 4 பேர் அத்துமீறியதாக சொல்லப்படுகிறது.
இதில், பாதிக்கப்பட்ட சிறுமி, தற்போது போலீஸில் புகார் அளித்துள்ளார். அதனடிப்படையில் கேரளாவில் இருந்த நடிகை மினு முனீரை சென்னை போலீசார் கைது செய்துள்ளனர். திருமங்கலம் போலீசார், சென்னை அழைத்து வந்து விசாரித்து வருகின்றனர்.
ஏற்கனவே, பிரபல மலையாள நடிகர்கள் ஜெயசூர்யா, முகேஷ், மணியன்பிள்ளை ராஜு மற்றும் இடைவேளை பாபு ஆகியோர் மீது மினு முனீர் பாலியல் புகார் கொடுத்து பரபரப்பை கிளப்பியிருந்தார்.