ரூ.50 கோடி வசூல் கிளப்பில் இணைந்த சர்வம் மாயா | கூட்ட நெரிசலால் கேன்சல் செய்யப்பட்ட ரேப்பர் வேடன் இசை நிகழ்ச்சி : ரயில் விபத்தில் பலியான ரசிகர் | 2025 தமிழ் சினிமா ஒரு ரீ-வைண்ட் | ஜன.3ல் 'பராசக்தி' பாடல் வெளியீட்டு விழா: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | புகையிலை விளம்பரத்திற்கு ரூ.40 கோடி: தைரியமாக மறுத்த சுனில் ஷெட்டி | ‛பருத்திவீரன்' புகழ் பாடகி லட்சுமி அம்மாள் காலமானார் | 2026லாவது அஜித் படம் வருமா | அண்ணா சாலை இரும்பு பாலத்திற்கு சிவாஜி பெயர் : ரசிகர்கள் வேண்டுகோள் | 2025ல் தமிழ் சினிமாவில் மறைந்த திரைப்பிரபலங்கள் | ஜனவரி 16ல் ஜூலிக்கு திருமணம்: பல வருட காதலரை மணக்கிறார் |

பத்திரிகையாளராக இருந்து நடிகை ஆனவர் ரினி ஆன் ஜார்ஜ். '916 குஞ்சூட்டன்' உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். ஏராளமான விளம்பர படங்கள் சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார். இந்த நிலையில் ரினி மலையாள அரசியலின் இளம் அரசியல்வாதியும், காங்கிரஸ் எம்.எல்.ஏவுமான ராகுல் மம்கூத்ததில் மீது மறைமுகமாக பாலியல் குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
நேற்று நிருபர்களிடம் பேசிய அவர் ராகுலின் பெயரை குறிப்பிடாமல் கூறியதாவது: ஒரு கட்சியின் இளம் தலைவர் சமூக வலைத்தளம் மூலம் என்னுடன் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தி கொண்டார். என்னை நட்சத்திர ஓட்டலுக்கு வரவழைத்து பாலியல் தொல்லை கொடுத்தார். அவர் தொடர்ந்து ஆபாச படங்கள், ஆபாசமாக குறுஞ்செய்திகளை அனுப்பி வந்தார். இதை கண்டித்ததுடன், இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று வலியுறுத்தினேன். அதன் பின்னர் சில நாட்கள் தனது செயல்பாடுகளை நிறுத்தினார்.
பின்னர் அவர் மீண்டும் ஆபாச படங்கள், குறுஞ்செய்திகளை அனுப்பி வந்தார். அவரது மோசமான நடவடிக்கை குறித்து அந்த கட்சியின் தலைவரிடம் தெரிவித்தும், அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அந்த கட்சியின் இளம் தலைவரால் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட பல பெண்களை எனக்கு தெரியும். அவரால் பாதிக்கப்பட்ட இளம்பெண்கள், நடந்தது குறித்து வெளியே சொல்ல முன்வர வேண்டும். அவரது பெயரை வெளியிடாததற்கு காரணம், அந்த கட்சியில் உள்ள பல தலைவர்களுடன் எனக்கு நல்ல உறவு உள்ளதால், அதை சீர்குலைக்க நான் விரும்பவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிலையில் மற்றொரு நடிகை தனது பெயரை குறிப்பிடாமல் ராகுலின் பெயரை குறிப்பிட்டு பாலியல் புகார் கூறியுள்ளார். இதை தொடர்ந்து கேரள மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவராக இருந்த ராகுல் அந்த பதவியை ராஜினாமா செய்தார். தன் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள அவர் அதனை சட்டரீதியாக எதிர்கொள்ள இருப்பதாகவும் கூறியுள்ளார்.




