என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள் : கயாடு லோஹர் வேதனை | பெரிய சம்பளத்தை மட்டுமே எதிர்பார்த்து நான் நடிப்பதில்லை : தீபிகா படுகோனே விளக்கம் | ரன்வீர், சாரா நடித்துள்ள துரந்தர் பட டிரைலர் வெளியானது | ரஜினி படத்திலிருந்து விலகியதால் மீண்டும் கார்த்தியுடன் இணையும் சுந்தர்.சி | பாலகிருஷ்ணா 111வது படத்தில் ராணி ஆக நயன்தாரா | எம்புரான் விமர்சனம் : பிரித்விராஜ் கருத்து | மீண்டும் காமெடி ஹீரோவான சதீஷ் | ஒரே படத்தின் மூலம் தமிழுக்கு வரும் தெலுங்கு, மலையாள ஹீரோயின்கள் | டேனியல் பாலாஜியின் கடைசி படம்: 28ம் தேதி வெளியாகிறது | பிளாஷ்பேக்: சோகத்தில் வென்ற ரஜினிகாந்தும், தோற்ற விஜயகாந்தும் |

கடந்த பிப்ரவரி மாதம் கன்னட நடிகை ரன்யா ராவ், விமானம் மூலம் அடிக்கடி தங்க கடத்தலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட நிகழ்வு பரபரப்பு ஏற்படுத்தியது. அவரது ஜாமீன் மனுக்கள் தொடர்ந்து நிராகரிகப்பட்டதை தொடர்ந்து தற்போது அவர் சிறையில் இருக்கிறார். தமிழில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான வாகா படத்தில் கதாநாயகியாக நடித்தது இவர்தான். அது மட்டுமல்ல இவர் கர்நாடக டிஜிபி ஆன ராமச்சந்திரா ராவ் என்பவரின் வளர்ப்பு மகளும் கூட.
இவர் இந்த தங்க கடலுக்கு தனது வளர்ப்பு தந்தையின் செல்வாக்கையும் அதிகாரத்தையும் பயன்படுத்தினார் என்று குற்றம் சாட்டப்பட்டது. இதனால் டிஜிபி ராமச்சந்திர ராவ் அவரது பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு கட்டாய விடுமுறையில் செல்ல பணிக்கப்பட்டார். இந்த நிலையில் தற்போது அவருக்கு மீண்டும் டிஜிபி பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. குடியுரிமைகள் அமலாக்க துறையில் இவர் டிஜிபியாக நியமிக்கப்பட்டு அதற்கான அரசாணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.