என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள் : கயாடு லோஹர் வேதனை | பெரிய சம்பளத்தை மட்டுமே எதிர்பார்த்து நான் நடிப்பதில்லை : தீபிகா படுகோனே விளக்கம் | ரன்வீர், சாரா நடித்துள்ள துரந்தர் பட டிரைலர் வெளியானது | ரஜினி படத்திலிருந்து விலகியதால் மீண்டும் கார்த்தியுடன் இணையும் சுந்தர்.சி | பாலகிருஷ்ணா 111வது படத்தில் ராணி ஆக நயன்தாரா | எம்புரான் விமர்சனம் : பிரித்விராஜ் கருத்து | மீண்டும் காமெடி ஹீரோவான சதீஷ் | ஒரே படத்தின் மூலம் தமிழுக்கு வரும் தெலுங்கு, மலையாள ஹீரோயின்கள் | டேனியல் பாலாஜியின் கடைசி படம்: 28ம் தேதி வெளியாகிறது | பிளாஷ்பேக்: சோகத்தில் வென்ற ரஜினிகாந்தும், தோற்ற விஜயகாந்தும் |

தெலுங்கில் தேவரா படத்தை அடுத்து ராம் சரணுடன் பெத்தி என்ற படத்தில் நடித்து வருகிறார் ஜான்வி கபூர். ஹிந்தியில் அவர் நடித்துள்ள பரம் சுந்தரி என்ற படம் ஆகஸ்ட் 29ல் திரைக்கு வருவதால் அப்படத்தின் பிரமோசன் நிகழ்ச்சிகளிலும் தற்போது பங்கேற்று வருகிறார். மேலும், அவர் தான் மும்பையில் இருந்து எந்த அவுட்டோர்களுக்கு சென்றாலும் ஒரு தலையணையையும் கூடவே எடுத்துச் செல்கிறார். இப்படி தொடர்ந்து தலையணையுடன் ஜான்வி கபூர் செல்வது குறித்து அவரிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு, இது எனக்கு பிடித்தமான தலையணை என்பதோடு, இதில் படுத்தால் நிம்மதியாக தூக்கம் வரும். அதனால் தான் எங்கு சென்றாலும் இந்த தலையணை இல்லாமல் நான் பயணம் செய்வதே இல்லை என்று கூறியிருக்கிறார் ஜான்வி கபூர்.