பிளாஷ்பேக் : ராஜா என்னை மன்னித்துவிடு... கைவிடப்பட்ட கமல் - ருத்ரைய்யா படம் | பிளாஷ்பேக் : ஒரே வருடத்தில் 9 படங்களில் நடித்த சிவாஜி | இடைவெளிக்குப் பின் படப்பிடிப்பில் அனுஷ்கா | நாகேஸ்வரராவ் நூற்றாண்டு விழாவில் சிரஞ்சீவிக்கு விருது: அமிதாப் வழங்குகிறார் | வேதிகா உழைப்பாளி, சன்னி லியோன் மனிதநேயர் : பிரபுதேவா புகழாரம் | 16 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் மம்முட்டி, மோகன்லால் | பழம்பெரும் மலையாள நடிகை கவியூர் பொன்னம்மா காலமானார் | என்னை பற்றி என்ன வேண்டுமானாலும் பேசுங்க... அந்த பெண்ண பேசாதீங்க : ஜெயம் ரவி பேட்டி | என் கவுன்டர் என்பது ஹீரோயிசமா... இல்ல குற்றத்தை தடுக்கும் நடவடிக்கையா... : ‛வேட்டையன்' பிரிவியூ வெளியானது | இயக்குனர் கே.பாலசந்தர் பற்றி அவதூறு : பாடகி சுசித்ராவுக்கு எழுத்தாளர் சங்கம் கண்டனம் |
'16 வயதினிலே' படத்தில் பாவாடை, தாவணி அணிந்து கொண்டு ஸ்ரீதேவி பாடிய 'செந்தூரப் பூவே….' பாடலை இத்தனை வருடங்கள் கழித்து கேட்டாலும் அவ்வளவு புத்துணர்வு கிடைக்கும். பாடலுக்கான இசை, வரிகள், ஸ்ரீதேவியின் புன்னகை முகம், ஒளிப்பதிவு என அந்தப் பாடல் தமிழ் சினிமா பாடல்களில் ஒரு எவர் கிரீன் பாடலாக இருக்கிறது.
அவ்வளவு அழகான ஸ்ரீதேவி அளவுக்கு இல்லை என்றாலும் அவரது அழகில் பாதியாவது இருப்பார் அவரது மகள் ஜான்வி கபூர். தனது இன்ஸ்டாகிராம் தளத்தில் அடிக்கடி விதவிதமான கிளாமர் புகைப்படங்களைப் பதிவிடுபவர் ஜான்வி. நேற்று வித்தியாசமான பூக்கள் போட்ட புடவை ஒன்றை அணிந்து விதவிதமான போஸ்களில் போட்டோக்களைப் பதிவிட்டிருந்தார். அம்மா ஸ்ரீதேவியைப் போலவே கள்ளம் கபடம் இல்லாத சிரிப்பால் வசீகரிக்கிறார் ஜான்வி. அப்புகைப்படங்களுக்கு வழக்கம் போல லைக்குகளை அள்ளி வீசியிருக்கிறார்கள் ரசிகர்கள்.
அம்மாவைப் போல தமிழ், தெலுங்கில் நடித்துவிட்டு ஹிந்திப் பக்கம் போயிருந்தால் இந்நேரம் முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறியிருப்பார். ஆனால், ஏனோ ஹிந்தியை விட்டு தென்னக மொழிகள் பக்கம் வர மறுக்கிறார்.