பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

மணிரத்னம் இயக்கத்தில் அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவல் தற்போது இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது. இதன் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30ல் வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் என முன்னணி நடிகர்களுடன், ரகுமான் பார்த்திபன், பிரகாஷ்ராஜ், சரத்குமார், பிரபு என குணச்சித்திர நடிகர்கள் பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அதில் மதுராந்தகர் என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் ரகுமான் இந்தப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து சமீபத்தில் கூறியுள்ளார்.
“25 ஆண்டுகளுக்கு முன்பு இந்த நாவல் டிவி தொடராக எடுக்க முயற்சி நடைபெற்றபோது அதில் ஒரு கதாபாத்திரத்தில் நானும் நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தேன். துரதிஷ்டவசமாக அந்த முயற்சி நடக்கவில்லை. அதேசமயம் பொன்னியின் செல்வன் நாவலை மணிரத்னம் இயக்குகிறார் என தகவல் வெளியானபோது எப்படியாவது அதில் ஒரு கதாபாத்திரம் நமக்கு கிடைத்து விடாதா என நினைத்திருந்தேன். அதற்கேற்ற மாதிரி மணிரத்னத்திடம் இருந்து அழைப்பு வந்தது.
படப்பிடிப்பின்போது நிறைய நடிகர்கள் காம்பினேஷன் கொண்ட காட்சியில் அதிக கதாபாத்திர பெயர்கள் அடங்கிய மிக நீண்ட ஒரு வசனத்தை பெயர் வரிசை மாறாமல் நடந்துகொண்டே பேசி நடிக்க வேண்டி இருந்தது. அதை நான்கே டேக்கில் பேசி முடித்ததும் சுற்றியிருந்த படக்குழுவினர் கைதட்டி தங்களது பாராட்டுக்களை தெரிவித்தனர்” என்று கூறியுள்ளார்.