லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
மணிரத்னம் இயக்கத்தில் அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவல் தற்போது இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது. இதன் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30ல் வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் என முன்னணி நடிகர்களுடன், ரகுமான் பார்த்திபன், பிரகாஷ்ராஜ், சரத்குமார், பிரபு என குணச்சித்திர நடிகர்கள் பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அதில் மதுராந்தகர் என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் ரகுமான் இந்தப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து சமீபத்தில் கூறியுள்ளார்.
“25 ஆண்டுகளுக்கு முன்பு இந்த நாவல் டிவி தொடராக எடுக்க முயற்சி நடைபெற்றபோது அதில் ஒரு கதாபாத்திரத்தில் நானும் நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தேன். துரதிஷ்டவசமாக அந்த முயற்சி நடக்கவில்லை. அதேசமயம் பொன்னியின் செல்வன் நாவலை மணிரத்னம் இயக்குகிறார் என தகவல் வெளியானபோது எப்படியாவது அதில் ஒரு கதாபாத்திரம் நமக்கு கிடைத்து விடாதா என நினைத்திருந்தேன். அதற்கேற்ற மாதிரி மணிரத்னத்திடம் இருந்து அழைப்பு வந்தது.
படப்பிடிப்பின்போது நிறைய நடிகர்கள் காம்பினேஷன் கொண்ட காட்சியில் அதிக கதாபாத்திர பெயர்கள் அடங்கிய மிக நீண்ட ஒரு வசனத்தை பெயர் வரிசை மாறாமல் நடந்துகொண்டே பேசி நடிக்க வேண்டி இருந்தது. அதை நான்கே டேக்கில் பேசி முடித்ததும் சுற்றியிருந்த படக்குழுவினர் கைதட்டி தங்களது பாராட்டுக்களை தெரிவித்தனர்” என்று கூறியுள்ளார்.