வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று | பிரதீப் ரங்கநாதன் பாணியில் அபிஷன் ஜீவிந்த் நாளை மறுநாள் ஹீரோ ஆகிறார் | பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா | ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி | 3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி |
வெங்கட் பிரபு இயக்கும் நேரடி தெலுங்கு படத்தில் நாக சைதன்யா நடிக்கிறார். படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை. தமிழிலும் இந்த படம் தயாராவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் நாகசைதன்யா ஜோடியாக உப்பன்னா, ஷியாம் சிங்காராய், பங்கார்ராஜு, தி வாரியர் படங்களில் நடித்த கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். தமிழில் தற்போது வணங்கான் படத்தில் நடித்து வருகிறார். நாகசைதன்யா இதுவரை நடித்த படங்களிலேயே இதுதான் அதிக பட்ஜெட் கொண்ட படமாக உருவாகி வருகிறது.
இளையராஜாவும், யுவன் சங்கர்ராஜாவும் இணைந்து இந்த படத்திற்கு இசை அமைக்கிறார்கள். ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்க்ரீன் சார்பில் ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரிக்கிறார். இன்று முதல் இதன் படப்பிடிப்பு ஐதராபாத் ராமோஜி பிலிம் சிட்டியில் நேற்று (செப்.,22) துவங்கியது. இந்நிலையில் இந்த படத்தின் மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த முழு பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.
ஒளிப்பதிவாளராக எஸ்.ஆர்.கதிர், தெலுங்கில் வசனகர்த்தாவாக அபூரி ரவி, எடிட்டராக வெங்கட் ராஜன், புரொடக்ஷன் டிசைனராக ராஜீவன், கலை இயக்குனராக சத்திய நாராயணா, ஸ்டண்ட் இயக்குனர்களாக ஹாலிவுட் ஸ்டண்ட் இயக்குனர் யானிக் பெண் மற்றும் மகேஷ் மேத்யூ ஆகியோர் பணியாற்ற உள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.