பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
நடிகை குஷ்பு, சமீபத்தில் யுடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: எனக்கு மூன்று அண்ணன்கள். வீட்டில் நான் தான் கடைக்குட்டி. மும்பையில் நாங்கள் வசித்த பகுதி ஒரு குட்டி இந்தியா மாதிரி. நாங்கள் இரண்டு முஸ்லிம் குடும்பங்கள் இருந்தோம். மற்றபடி, அங்கிருந்தவர்கள் அனைவருமே பல்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். தீபாவளி, கிருஷ்ண ஜெயந்திகளுக்கு நடுவேதான் நாங்கள் வளர்ந்தோம். விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களில் அவர்கள் கொடுக்கும் கொழுக்கட்டைக்காக ஜெய் ஜெய் கோஷம் போடுவோம். நான் சென்னை வந்த பிறகு எனது மூன்று அண்ணனும் கூடவே வந்துவிட்டார்கள்.
அண்ணனுக்கு நடிகை ஹேமமாலினி மற்றும் அவர்களது குடும்பம் நல்ல பழக்கம். அதனால் அவருடன் அவர்கள் வீட்டுக்கு அடிக்கடி செல்வோம். அங்குதான் அவர்கள் வீட்டில் இட்லி, தோசை எல்லாம் சாப்பிடுவேன். அப்படி ஒருமுறை சென்றபோதுதான் தயாரிப்பாளர்கள் ரவி சோப்ரா மற்றும் அவரது தந்தை பி.ஆர். சோப்ரா வந்திருந்தார்கள். என்னைப் பார்த்ததும் இந்த பெண் நடிப்பாளா எனக் கேட்டார்கள். நான் நடிச்சா என்ன தருவீங்க எனக் கேட்டேன். உனக்கு என்ன வேணும் என அவர்கள் கேட்கவும் தினமும் ஒரு கப் வெண்ணிலா ஐஸ்க்ரீம் என பதில் அளித்தேன். இது நடந்தபோது எட்டு வயது. அவர்கள்தான் என்னுடைய பெயரை குஷ்பு என மாற்றினார்கள். இஸ்லாத்தில் நிக்கத் எனதான் பெயர் உண்டு. என்னுடைய பெயர் நக்கத் என்பது பெர்ஸிய மொழி சார்ந்ததாக இருந்தது. அதனால் அதற்கு ஈடான ஹிந்தி பெயரை 'குஷ்பு' என எனக்குச் சூட்டினார்கள்” என்கிறார்.