பாடகி சுசித்ரா மீது கொச்சின் போலீசில் புகார்! | இன்ஸ்டா கணக்கை மீட்டெடுத்த ஜெயம் ரவி | திருவருள், மன்மதன், கொம்பன் - ஞாயிறு திரைப்படங்கள் | மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு |
மிகப்பெரிய வெற்றி பெற்ற எங்கேயும் எப்போதும் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானவர் தெலுங்கு நடிகர் ஷர்வானந்த். அதைத்தொடர்ந்து ஒன்றிரண்டு தமிழ் படங்களில் நடித்தவர், தற்போது தெலுங்கில் ஓகே ஓக ஜீவிதம் என்கிற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் தமிழில் கணம் என்கிற பெயரில் வெளியாகிறது. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்தில் கதாநாயகியாக ரித்து வர்மா நடிக்க, நடிகை அமலா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்..
இந்த படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தங்களது குடும்ப தயாரிப்பு நிறுவனம் என்பதால், நட்புக்காக நடிகர் கார்த்தி இந்த படத்தில் ஒரு பாடலைப் பாடி உள்ளதோடு குழந்தைகளுடன் சேர்ந்து அந்த பாடலிலும் பாடலிலும் நடித்துள்ளார். இதுகுறித்து நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ள ஷர்வானந்த் கார்த்தியை நேரில் சந்தித்து தனது நன்றியை தெரிவித்துள்ளார்