பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
நடிகை தமன்னாவிற்கு தமிழில் பட வாய்ப்பு இல்லாவிட்டாலும் தெலுங்கு, ஹிந்தி என பிற மொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில் ஒரு பேட்டியில் இவர் கூறுகையில், ‛‛சினிமாவில் பெண்களுக்கு மதிப்பே இல்லை. பெண்கள் பேச்சை ஒரு பொருட்டாக கூட மதிக்க மாட்டார்கள். ஹீரோக்களுக்கு வழங்கும் சம்பளத்தில் பாதி கூட ஹீரோயின்களுக்கு தருவதில்லை. போஸ்டர்களில் ஹீரோயின்கள் வருவதே பெரிய விஷயம். புரொமோஷன்சகளுக்கு ஹீரோ வரவில்லை என்றால் அதை ஒரு மாதிரியாகவும், ஹீரோயின்கள் வரவில்லை என்றால் அதை ஒரு மாதிரியாகவும் விமர்சிப்பர். இந்த நிலைமை எல்லாம் எப்போது மாறும் என தெரியவில்லை'' என தனது ஆதங்கத்தை தமன்னா வெளிப்படுத்தி உள்ளார்.