புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
நம் நாடு 75ம் ஆண்டு சுதந்திர தினத்தை விமரிசையாக கொண்டாடி வருகிறது. இதன் ஒரு பகுதியாக இன்று(ஆக.,13) முதல் வீடு தோறும் மூன்று தினங்களுக்கு வீட்டில் கொடியேற்றுங்கள் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார். அதை பலரும் பின்பற்ற தொடங்கி உள்ளனர். மேலும் சமூகவலைதளங்களில் உள்ளவர்கள் தங்களின் முகப்பு படமாக தேசிய கொடியை வைக்கும்படி கேட்டிருந்தார் பிரதமர். திரையுலகினர் பலரும் அதை பின்பற்ற தொடங்கி உள்ளனர். தமிழகத்தில் ரஜினி, பிரசன்னா, செல்வராகவன், இந்துஜா உள்ளிட்ட வெகுசிலரே தங்களின் சமூகவலைதள முகப்பு போட்டோவை மாற்றினர். இந்நிலையில் இசையமைப்பாளரும், சமீபத்தில் ராஜ்சபா எம்பியாகவும் பொறுப்பேற்ற இளையராஜாவும் சமூகவலைதளத்தில் தனது முகப்பு போட்டோவில் தேசிய கொடியை வைத்துள்ளார்.