லோகேஷ் கனகராஜ், வாமிகா கபி நடிக்கும் ‛டிசி' | உறவுகள் பொய் சொன்னால் என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது : தமன்னா | 15 வருடத்திற்கு பிறகு மலையாள படம் மூலம் ரீஎன்ட்ரி கொடுக்கும் மோகினி | மம்முட்டிக்காக கண்ணூர் கோவிலில் பொன்குடம் நேர்த்திக்கடன் செலுத்திய ரசிகர் | ரெட் லேபிள் படத்தின் முதல் பார்வையை வெளியிட்ட நடிகை சிம்ரன் | இப்ப ஹீரோ, அடுத்து இயக்கம் : புதுமாப்பிள்ளை அபிஷன் ஜீவிந்த் பேட்டி | இந்தப்போக்கு மோசமானது : நிவேதா பெத்துராஜ் | தன் இறப்புக்கு லீவு வாங்கிக் கொடுத்த அப்பா : மேடையில் கண் கலங்கிய ஆனந்தராஜ் | அல்லு அர்ஜுன் தம்பி அல்லு சிரிஷ் நிச்சயதார்த்தம் | இயக்குனர் வி.சேகர் மருத்துவமனையில் அட்மிட் : மகன் உருக்கமான வேண்டுகோள் |

இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு தமிழக அரசு சார்பில் நேற்று (செப்.,13) பாராட்டு விழா நடைபெற்றது. இதில், முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்கள், ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட நடிகர்கள் பங்கேற்றனர். விழா தொடர்பாக தற்போது இளையராஜா தனது சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் அவர் பேசியதாவது: நேற்றைய தினம் தமிழக அரசு நடத்திய பாராட்டு விழாவில் அதீத மகிழ்ச்சியின் காரணமாக என்னால் அதிகம் பேச இயலவில்லை. அவ்வளவு ஆனந்தம். ஒரு பாராட்டு விழாவை இவ்வளவு சிறப்பாக, ஒரு முதல்வர், அரசு முனைப்புடன் செய்தது என்னால் நம்ப முடியவில்லை. எதற்காக எனக்கு இந்த பாராட்டுவிழா, இவ்வளவு அன்பு செலுத்த நான் என்ன செய்தேன் என முதல்வரிடம் கேட்டேன். அது நான் போட்ட இசையாக இருக்கலாம், அது வேறு சமாச்சாரம். அதனை அவர் தான் சொல்ல முடியும்.
இதனையெல்லாம் நான் எதிர்பார்ப்பவன் அல்ல. அப்படிப்பட்ட எனக்கு பாராட்டுவிழா என்பது, சிம்பொனியின் சிகரத்தை தொட்டதால்தான் நடந்திருக்கிறது. முதல்வர் என்னிடம் சங்கத்தமிழ் நூல் பாடல்களுக்கு நான் இசையமைக்க வேண்டும் என்றும், உங்களைத் தவிர வேறு யாராலும் அது முடியாது என சொன்னதும் எனக்கு மேலும் ஊக்களிக்கிறது. கண்டிப்பாக முதல்வரின் வேண்டுகோளை நிறைவேற்றுவேன். இவ்வாறு அவர் பேசியுள்ளார்.