படம் 1% ஏமாற்றினாலும் என் வீடுதேடி வரலாம்: 'தி ராஜா சாப்' இயக்குனர் மாருதி பேச்சு | பிரியங்கா மோகனின் கன்னட படம் '666 ஆப்ரேஷன் ட்ரீம் தியேட்டர்' பர்ஸ்ட்லுக் வெளியீடு | பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை |

இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு தமிழக அரசு சார்பில் நேற்று (செப்.,13) பாராட்டு விழா நடைபெற்றது. இதில், முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்கள், ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட நடிகர்கள் பங்கேற்றனர். விழா தொடர்பாக தற்போது இளையராஜா தனது சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் அவர் பேசியதாவது: நேற்றைய தினம் தமிழக அரசு நடத்திய பாராட்டு விழாவில் அதீத மகிழ்ச்சியின் காரணமாக என்னால் அதிகம் பேச இயலவில்லை. அவ்வளவு ஆனந்தம். ஒரு பாராட்டு விழாவை இவ்வளவு சிறப்பாக, ஒரு முதல்வர், அரசு முனைப்புடன் செய்தது என்னால் நம்ப முடியவில்லை. எதற்காக எனக்கு இந்த பாராட்டுவிழா, இவ்வளவு அன்பு செலுத்த நான் என்ன செய்தேன் என முதல்வரிடம் கேட்டேன். அது நான் போட்ட இசையாக இருக்கலாம், அது வேறு சமாச்சாரம். அதனை அவர் தான் சொல்ல முடியும்.
இதனையெல்லாம் நான் எதிர்பார்ப்பவன் அல்ல. அப்படிப்பட்ட எனக்கு பாராட்டுவிழா என்பது, சிம்பொனியின் சிகரத்தை தொட்டதால்தான் நடந்திருக்கிறது. முதல்வர் என்னிடம் சங்கத்தமிழ் நூல் பாடல்களுக்கு நான் இசையமைக்க வேண்டும் என்றும், உங்களைத் தவிர வேறு யாராலும் அது முடியாது என சொன்னதும் எனக்கு மேலும் ஊக்களிக்கிறது. கண்டிப்பாக முதல்வரின் வேண்டுகோளை நிறைவேற்றுவேன். இவ்வாறு அவர் பேசியுள்ளார்.