டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

இந்திய கிரிக்கெட்டை உலக அளவில் வேறொரு தளத்திற்குக் கொண்டு சென்றவை ஐபிஎல் போட்டிகள். 2008ல் ஆரம்பமான இந்த கிரிக்கெட் திருவிழா கடந்த 15 வருடங்களாக வருடா வருடம் வெற்றிகரமாக நடந்து வருகிறது.
நாளை இந்த ஆண்டிற்கான இறுதிப் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி விளையாட்டு மைதானத்தில் நடைபெற உள்ளது. அதில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோத உள்ளன. இந்த ஆண்டில் புதிதாக சேர்க்கப்பட்ட இரண்டு அணிகளில் ஒன்றான குஜராத் டைட்டன்ஸ் அணி முதல் ஆண்டிலேயே இறுதிப் போட்டியில் பங்கேற்கிறது.
நாளை இறுதி ஆட்டத்திற்கு முன்பாக கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இதில் ஏஆர் ரஹ்மான் இசை நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. இது தொடர்பான வீடியோ ஒன்றை ரஹ்மான் வெளியிட்டுள்ளார். கடந்த 75 வருடங்களாக பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ள இந்திய கிரிக்கெட்டைப் பெருமைப்படுத்தும் விதமாக இசை நிகழ்ச்சி அமைய உள்ளது என ரகுமான் குறிப்பிட்டுள்ளார்.




