இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
'கேஜிஎப் 2' படம் மூலம் கன்னட சினிமாவை இந்திய அளவில் மட்டுமல்லாது, உலக அளவிலும் உயர்த்தியவர் கன்னட இயக்குனரான பிரசாந்த் நீல். 'கேஜிஎப் 2' படத்திற்குப் பிறகு பிரபாஸ் நடிக்கும் 'சலார்' படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தை அடுத்து ஜுனியர் என்டிஆரின் 31வது படத்தை இயக்க உள்ளார் பிரசாந்த். இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஜுனியர் என்டிஆரின் பிறந்தநாளான மே 20ம் தேதியன்று வெளியானது.
'சலார்' படத்தின் முதல் பார்வை போஸ்டருக்கும், ஜுனியர் என்டிஆரின் 31வது பட அறிவிப்பு போஸ்டருக்கும் பெரிய வித்தியாசமில்லை. இரண்டுமே ரவுடி கதைகள் போலத்தான் இருக்கும் என்பதை இரண்டு போஸ்டர்களின் டிசைன்களுமே வெளிப்படுத்துகின்றன. இரண்டு போஸ்டர்களிலும் படத்தின் ஹீரோக்கள் கருப்பு வெள்ளையில்தான் இடம் பெற்றுள்ளார்கள்.
'கேஜிஎப்' படத்தின் இரண்டு பாகங்களையும் ஒரு 'ரா'வான படமாகத்தான் எடுத்திருந்தார் பிரசாந்த் நீல். அது போன்றே 'சலார், ஜுனியர் என்டிஆர் 31' ஆகிய படங்கள் இருக்குமோ என்ற ஐயம் ரசிகர்களிடம் எழுந்துள்ளது. இது குறித்து தங்களது அதிருப்தியை ரசிகர்கள் வெளிப்படுத்தியுள்ளார்கள். ஒரே மாதிரியான டிசைன், கதை இருந்தால் அது ரசிகர்களுக்கு அலுப்பை ஏற்படுத்தும். 1000 கோடி வசூலைக் கொடுத்த பிரசாந்த் நீலுக்கு இது புரிந்திருக்காதா என்ன?