லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
'கேஜிஎப் 2' படம் மூலம் கன்னட சினிமாவை இந்திய அளவில் மட்டுமல்லாது, உலக அளவிலும் உயர்த்தியவர் கன்னட இயக்குனரான பிரசாந்த் நீல். 'கேஜிஎப் 2' படத்திற்குப் பிறகு பிரபாஸ் நடிக்கும் 'சலார்' படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தை அடுத்து ஜுனியர் என்டிஆரின் 31வது படத்தை இயக்க உள்ளார் பிரசாந்த். இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஜுனியர் என்டிஆரின் பிறந்தநாளான மே 20ம் தேதியன்று வெளியானது.
'சலார்' படத்தின் முதல் பார்வை போஸ்டருக்கும், ஜுனியர் என்டிஆரின் 31வது பட அறிவிப்பு போஸ்டருக்கும் பெரிய வித்தியாசமில்லை. இரண்டுமே ரவுடி கதைகள் போலத்தான் இருக்கும் என்பதை இரண்டு போஸ்டர்களின் டிசைன்களுமே வெளிப்படுத்துகின்றன. இரண்டு போஸ்டர்களிலும் படத்தின் ஹீரோக்கள் கருப்பு வெள்ளையில்தான் இடம் பெற்றுள்ளார்கள்.
'கேஜிஎப்' படத்தின் இரண்டு பாகங்களையும் ஒரு 'ரா'வான படமாகத்தான் எடுத்திருந்தார் பிரசாந்த் நீல். அது போன்றே 'சலார், ஜுனியர் என்டிஆர் 31' ஆகிய படங்கள் இருக்குமோ என்ற ஐயம் ரசிகர்களிடம் எழுந்துள்ளது. இது குறித்து தங்களது அதிருப்தியை ரசிகர்கள் வெளிப்படுத்தியுள்ளார்கள். ஒரே மாதிரியான டிசைன், கதை இருந்தால் அது ரசிகர்களுக்கு அலுப்பை ஏற்படுத்தும். 1000 கோடி வசூலைக் கொடுத்த பிரசாந்த் நீலுக்கு இது புரிந்திருக்காதா என்ன?