எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
'கேஜிஎப் 2' படம் மூலம் கன்னட சினிமாவை இந்திய அளவில் மட்டுமல்லாது, உலக அளவிலும் உயர்த்தியவர் கன்னட இயக்குனரான பிரசாந்த் நீல். 'கேஜிஎப் 2' படத்திற்குப் பிறகு பிரபாஸ் நடிக்கும் 'சலார்' படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தை அடுத்து ஜுனியர் என்டிஆரின் 31வது படத்தை இயக்க உள்ளார் பிரசாந்த். இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஜுனியர் என்டிஆரின் பிறந்தநாளான மே 20ம் தேதியன்று வெளியானது.
'சலார்' படத்தின் முதல் பார்வை போஸ்டருக்கும், ஜுனியர் என்டிஆரின் 31வது பட அறிவிப்பு போஸ்டருக்கும் பெரிய வித்தியாசமில்லை. இரண்டுமே ரவுடி கதைகள் போலத்தான் இருக்கும் என்பதை இரண்டு போஸ்டர்களின் டிசைன்களுமே வெளிப்படுத்துகின்றன. இரண்டு போஸ்டர்களிலும் படத்தின் ஹீரோக்கள் கருப்பு வெள்ளையில்தான் இடம் பெற்றுள்ளார்கள்.
'கேஜிஎப்' படத்தின் இரண்டு பாகங்களையும் ஒரு 'ரா'வான படமாகத்தான் எடுத்திருந்தார் பிரசாந்த் நீல். அது போன்றே 'சலார், ஜுனியர் என்டிஆர் 31' ஆகிய படங்கள் இருக்குமோ என்ற ஐயம் ரசிகர்களிடம் எழுந்துள்ளது. இது குறித்து தங்களது அதிருப்தியை ரசிகர்கள் வெளிப்படுத்தியுள்ளார்கள். ஒரே மாதிரியான டிசைன், கதை இருந்தால் அது ரசிகர்களுக்கு அலுப்பை ஏற்படுத்தும். 1000 கோடி வசூலைக் கொடுத்த பிரசாந்த் நீலுக்கு இது புரிந்திருக்காதா என்ன?