புஷ்கர் - காயத்ரி அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்? | செல்வராகவன் நடிக்கும் புதிய பட அறிவிப்பு! | பைசன் படம் குறித்து இயக்குனர் ராம் வெளியிட்ட தகவல் | ஒர்க் அவுட்டின்போது டிரெண்டிங் பாடலுக்கு நடனமாடிய மிருணாள் தாக்கூர் | ஓடிடியில் வெளியான கமலின் தக் லைப் | சிம்பு படத்தில் சிவராஜ்குமார் இணைகிறாரா? | ஹாரிஸ் ஜெயராஜை கவுரவப்படுத்திய கனடா அரசாங்கம் | அஜித்திடம் ஏமாற்றத்தை வெளிப்படுத்திய விஷ்ணு மஞ்சு | எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‛ராமாயணா' : அறிமுக வீடியோ வெளியீடு | மார்கோ 2 நிச்சயம் உருவாகும் : உன்னி முகுந்தன் விலகிய பிறகும் உறுதியாக நிற்கும் தயாரிப்பாளர் |
'புஷ்பா' படத்தின் இரண்டு பாகங்களின் வெற்றிக்குப் பிறகு பான் இந்தியா ஸ்டார் ஆக பிரபலமடைந்தவர் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன். அவர் தற்போது தமிழ் இயக்குனர் அட்லி இயக்கத்தில் இன்னும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்திற்குப் பிறகு 'கேஜிஎப், சலார்' படங்களின் இயக்குனரான பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இது குறித்த தகவலை படத்தைத் தயாரிக்க உள்ள தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தெரிவித்திருக்கிறார். அல்லு அர்ஜுன், பிரசாந்த் நீல் இருவரும் தற்போதுள்ள படங்களை முடித்த பிறகு இந்த 'ராவணம்' படம் ஆரம்பமாகும் எனத் தெரிகிறது.
ராமாயணத்தின் வில்லன் கதாபாத்திரமான ராவணன் கதையை மாற்றி 'பேன்டஸி' வகையில் இந்தப் படத்தைக் கொடுக்க உள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. ராமாயணத்தைத் தழுவித்தான் மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய் நடிக்க 2010ல் 'ராவணன்' படம் வெளிவந்தது.
'ராவணம்' படத்தை அதிக பொருட்செலவில் மிகப் பிரம்மாண்டமாகத் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளார்களாம்.